பதிவு செய்த நாள்
07 அக்2020
22:10
புதுடில்லி:அபுதாபி முதலீட்டு ஆணையமான, ஏ.டி.ஐ.ஏ., ரிலையன்ஸ் ரீடெய்ல் வணிகத்தில், 5,512.50 கோடி ரூபாயை முதலீடு செய்ததை அடுத்து, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் விலை, நேற்று, 4 சதவீதம் வரை அதிகரித்தது.
வர்த்தகத்தின் இடையே, 4 சதவீதம் வரை அதிகரித்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகள், வர்த்தக இறுதியில், 2.13 சதவீதம் அதிகரித்து, 2,257.15 ரூபாயாக உயர்ந்தது.ஏ.டி.ஐ.ஏ., மூலமாக, 5,512.50 கோடி ரூபாய் முதலீட்டை பெற்றதை அடுத்து, இதுவரை ரிலையன்ஸ் ரீட்டெய்ல் வெஞ்சர்ஸ் நிறுவனம் மொத்தம், 37 ஆயிரத்து, 710 கோடி ரூபாய் நிதியை திரட்டி இருக்கிறது.
ஏ.டி.ஐ.ஏ., நிறுவனம், 5,512.50 கோடி ரூபாய் முதலீடு செய்ததை அடுத்து, அதற்கு ரிலையன்ஸ் ரீட்டெய்ல் நிறுவனத்தின், 1.20 சதவீத பங்குகள் கிடைக்கும்
.ரிலையன்ஸ் ரீடெய்லில் முதலீடுகள்
நிறுவனம் முதலீடு (ரூபாய் கோடிகளில்)
சில்வர் லேக் 9,375.00
கே.கே.ஆர்., 5,550.00
ஜெனரல் அட்லாண்டிக் 3,675.00
முபதாலா 6,247.50
ஜி.ஐ.ஜி., 5,512.50
டி.பி.ஜி., 1,837.50
ஏ.டி.ஐ.ஏ., 5,512.50
மொத்தம் 37,710.00
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|