பதிவு செய்த நாள்
08 அக்2020
21:40
புதுடில்லி:நாட்டின் முக்கியமான, ஆறு நகரங்களில், சராசரி வீட்டு விலை, கடந்த செப்டம்பர் காலாண்டில், 2 - 7 சதவீதம் வரை குறைந்துள்ளது.
கொரோனா பாதிப்புகள் காரணமாக, தேவைகள் குறைந்ததால், சென்னை, டில்லி தலைநகர் பிராந்தியம், மும்பை, புனே, கோல்கட்டா, ஆமதாபாத் ஆகிய, ஆறு நகரங்களில் விலை சரிவு ஏற்பட்டுள்ளது என, சொத்து ஆலோசனை நிறுவனமான, 'நைட்பிராங் இந்தியா' தெரிவித்துள்ளது.இது குறித்து, மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
அதிகபட்சமாக, சென்னையில், 7 சதவீதம் அளவுக்கு விலை சரிவு ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து, புனே, டில்லி தலைநகர் பிராந்தியம் ஆகியவை, 5 சதவீதம் சரிவை சந்தித்து உள்ளன.இருப்பினும், பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் முறையே, 3 மற்றும் 4 சதவீதம் விலை அதிகரித்துள்ளது.கோல்கட்டா, ஆமதாபாத் ஆகிய நகரங்களில், 3 சதவீதமும்; மும்பையில், 2 சதவீதமும் விலை சரிந்து உள்ளது.
வீடுகள் விற்பனையை பொறுத்தவரை, செப்டம்பர் காலாண்டில், அதற்கு முந்தைய காலாண்டை விட, 3.5 மடங்கு அதிகம் விற்பனை ஆகியுள்ளது.மும்பை, புனே ஆகிய இடங்களில், மாநில அரசுகள் பதிவுக் கட்டணத்தை குறைத்தது, அப்பகுதிகளில் விற்பனை அதிகரிக்க உதவியாக இருந்து உள்ளது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|