பதிவு செய்த நாள்
08 அக்2020
21:44
புதுடில்லி:கடந்த செப்டம்பர் மாதத்தில், பயணியர் வாகன சில்லரை விற்பனை, 9.81 சதவீதம் அதிகரித்திருப்பதாக, எப்.ஏ.டி.ஏ., எனும், வாகன முகவர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு, மக்கள் பொதுப் போக்குவரத்தை விட, தனிப்பட்ட சொந்த வாகனங்களை பயன்படுத்த அதிகம் விரும்புவதே, இந்த விற்பனை அதிகரிப்புக்கு காரணம் என்றும் இவ்வமைப்பு தெரிவித்துள்ளது.இது குறித்து, மேலும் தெரிவித்து உள்ளதாவது:கடந்த செப்டம்பர் மாதத்தில் மொத்தம், 1.95 லட்சம் பயணியர் வாகனங்கள் விற்பனை ஆகியுள்ளன.
இதுவே, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் விற்பனை, 1.78 லட்சமாக இருந்தது. இருப்பினும், இருசக்கர வாகன விற்பனை, 12.62 சதவீதம் சரிந்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில், 11.64 லட்சம் வாகனங்கள் விற்பனை ஆகியிருந்த நிலையில், நடப்பாண்டு செப்டம்பரில், 10.17 லட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.வர்த்தக வாகன விற்பனையும், 33.65 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டுள்ளது.
மூன்று சக்கர வாகனத்தை பொறுத்தவரை விற்பனை, கடந்த ஆண்டு செப்டம்பருடன் ஒப்பிடும்போது, 58.86 சதவீதம் சரிந்துள்ளது.மாறாக, டிராக்டர் விற்பனை, 80.39 சதவீதம் அதிகரித்து உள்ளது.அனைத்து பிரிவுகளையும் சேர்த்துப் பார்த்தால், மொத்த விற்பனை, 10.24 சதவீதம் சரிவைக் கண்டிருக்கிறது.இவ்வாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|