ரிலையன்ஸ் ரீடெய்லில் முதலீடு ரூ.37 ஆயிரம் கோடியை தாண்டியது ரிலையன்ஸ் ரீடெய்லில் முதலீடு ரூ.37 ஆயிரம் கோடியை தாண்டியது ... விஎஸ்டி டில்லர்ஸ் அறிமுகப்படுத்தும்  “விஎஸ்டி கிசான்” பவர் டில்லர் விஎஸ்டி டில்லர்ஸ் அறிமுகப்படுத்தும் “விஎஸ்டி கிசான்” பவர் டில்லர் ...
‘நான்காவது தொழில் துறை புரட்சிக்கு இந்தியா தலைமை ஏற்கும்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 அக்
2020
21:47

புதுடில்லி:நான்காவது தொழில் துறை புரட்சியை, இந்தியா தலைமை ஏற்று வழிநடத்துவதற்கு உதவும் வகையில், ‘ஜியோ’ வடிவமைக்கப்பட்டுஉள்ளது என, ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்து உள்ளார்.

இணைய இணைப்பு

முதல் மூன்று தொழில் துறை புரட்சிகளை இந்தியா தவற விட்டுவிட்டாலும் கூட, தற்போது தகவல் தொழில்நுட்பங்களை ஒன்றிணைப்பதன் மூலம், நான்காவது தொழில் துறை புரட்சியை வழிநடத்த வாய்ப்பு உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.இந்த புரட்சியை இந்தியா வழிநடத்த தேவையானவற்றை வழங்க, ரிலையன்ஸ் குழுமத்தின் ஜியோ தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், காணொலி மூலமாக பங்கேற்ற அவர், மேலும் கூறியதாவது:நான்காவது தொழில் துறை புரட்சியை வழிநடத்த, மூன்று அடிப்படையான விஷயங்கள் தேவை. அதிவேக இணைய இணைப்பு, ‘டிஜிட்டல்’ செயலிகள் மற்றும் சகாய விலையிலான, ‘ஸ்மார்ட்’ சாதனங்கள் ஆகிய மூன்றும் தான் அவை.ஜியோ வருகைக்கு முன், இந்தியா, ‘2ஜி’ தொழில்நுட்பத்துடன் சிக்கி நின்று விட்டது. 2ஜி தொழில்நுட்பத்துக்கு வருவதற்கு, 25 ஆண்டுகள் பிடித்த நிலையில், ஜியோ, மூன்றே ஆண்டுகளில், ‘4ஜி’ தொழில்நுட்பத்தை கட்டியெழுப்பி விட்டது.

ஒரு வினாடிக்கு, ஏழு வாடிக்கையாளர்கள் ஜியோவில் சேர்ந்து வருகின்றனர். மேலும், ஜியோவால், ‘டேட்டா’ பயன்பாடு, 600 சதவீத வளர்ச்சியை கண்டுஉள்ளது. தற்போது, இந்திய வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் டேட்டா, ஜியோவுக்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடும்போது, 30 மடங்கு அதிகரித்து உள்ளது.


முதலிடம்

மொபைல் டேட்டா நுகர்வை பொறுத்தவரை, உலகளவில், 155வது இடத்திலிருந்த இந்தியா, நான்கே ஆண்டுகளில் முதலிடத்தை பிடித்துவிட்டது. தற்போது ஜியோ, ‘5ஜி’ தொழில் நுட்பத்தை அறிமுகம் செய்யும் முயற்சியில் இருக்கிறது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)