பதிவு செய்த நாள்
08 அக்2020
21:49
புதுடில்லி:இந்தியாவின், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில், 9.6 சதவீதம் அளவுக்கு சரிவு காணும் என, உலக வங்கி தெரிவித்துள்ளது.
மீட்சி பெறும்
கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக எடுக்கப்பட்ட ஊரடங்கு நடவடிக்கை காரணமாக, நிறுவனங்கள் மற்றும் வீடுகள் வருமான இழப்பை சந்தித்துள்ளன. இதனால், நாட்டின் பொருளாதார நிலைமை முன்பு இருந்ததைவிட மிகவும் மோசமாக இருக்கிறது என, உலக வங்கி தெரிவித்துள்ளது.
உலக வங்கி, அதன் தெற்காசிய பொருளாதாரம் குறித்த அறிக்கையில், இந்தியாவின் வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில், 9.6 சதவீதம் அளவுக்கு சரிவு காணும் என்று தெரிவித்துள்ளது. மேலும், 2021ம் ஆண்டில் வளர்ச்சி, 4.5 சதவீதம் மீட்சி பெறும் என்றும் தெரிவித்துள்ளது.
தெற்காசிய பிராந்தியத்தை பொறுத்தவரை, வளர்ச்சி நடப்பு, 2020ம் ஆண்டில், 7.7 சதவீதம் அளவுக்கு குறையும் என்றும் தெரிவித்துள்ளது. இந்தியாவை பொறுத்தவரை, இது ஒரு எதிர்பாராத நிலை. நிறைய பேர் வேலையிழப்புக்கு ஆளாகியிருக்கின்றனர்.
பிரச்னை
வங்கிகளில் வாராக் கடன் அதிகரித்து வருகிறது. இவை அனைத்தும் இந்தியா சமாளிக்க வேண்டிய பிரச்னைகளாகும்.இன்னும் ஓராண்டில், வறுமைக் கோட்டிற்குள் வாழும் மக்களின் எண்ணிக்கை, 33 சதவீதம் அளவுக்கு அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|