பதிவு செய்த நாள்
08 அக்2020
21:50
மும்பை:மும்பை பங்குச் சந்தையின் குறியீடான, ‘சென்செக்ஸ்’ மீண்டும், 40 ஆயிரம் புள்ளிகளை, ஏழு மாதங்களுக்கு பின், நேற்றைய வர்த்தகத்தில் எட்டியது.
தகவல் தொழில்நுட்ப நிறுவன பங்குகள் விலை அதிகரித்தது, இதற்கு உதவியாக இருந்தது.நேற்றைய வர்த்தகத்தில், 400 புள்ளிகள் வரை அதிகரித்த சென்செக்ஸ், வர்த்தகத்தின் இறுதியில், 303.72 புள்ளிகள் அதிகரித்து, 40182.67 புள்ளிகளில் நிலைபெற்றது.இதேபோல், தேசிய பங்குச் சந்தையின், ‘நிப்டி’யும், 95.75 புள்ளிகள் அதிகரித்து, 11834.60 புள்ளிகளில் நிலைபெற்றது.
சென்செக்ஸ் பிரிவில், ‘அல்ட்ராடெக் சிமென்ட், டி.சி.எஸ்., எச்.சி.எல்., டெக், இன்போசிஸ், எச்.டி.எப்.சி., பேங்க், சன் பார்மா’ ஆகிய நிறுவன பங்குகளின் விலை அதிகரித்தது. டி.சி.எஸ்., நிறுவனம், 16 ஆயிரம் கோடி ரூபாய்க்கு பங்குகளை திரும்ப வாங்க இருப்பதாக அறிவித்ததை அடுத்து, இந்நிறுவன பங்குகள் விலை, 3 சதவீதம் வரை அதிகரித்தது.மாறாக, ‘ஓ.என்.ஜி.சி., ஐ.டி.சி., பவர்கிரிட், ரிலையன்ஸ், எல்., அண்டு டி., ஏஷியன் பெயின்ட்ஸ்’ ஆகிய நிறுவன பங்குகள் விலை, சரிவைக் கண்டன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|