பதிவு செய்த நாள்
09 அக்2020
21:59
மும்பை:தொடர்ந்து, 7வது நாளாக நேற்றும், இந்திய பங்குச் சந்தைகள் உயர்வைக் கண்டன. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ், 327 புள்ளிகள் உயர்ந்தது. ரிசர்வ் வங்கியின் அறிவிப்பை அடுத்து, நிதி நிறுவன பங்குகள் விலை உயர்ந்தது, சந்தையின் இந்த எழுச்சிக்கு காரணமாக அமைந்தது.
நடப்பு நிதியாண்டின் இறுதி காலாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி மீட்சியை காணும் என எதிர்பார்ப்பதாக, ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறியதும், சந்தையின் எழுச்சிக்கு உதவிகரமாக இருந்தது.மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் பிரிவு, வர்த்தகத்தின் இறுதியில், 326.82 புள்ளிகள் அதிகரித்து, 40,509.49 புள்ளிகளாக உயர்ந்தது.
இதேபோல், தேசிய பங்குச் சந்தையின் நிப்டியும், 79.60 புள்ளிகள் அதிகரித்து, 11,914.20 புள்ளிகளில் நிலைபெற்றது.நேற்றைய வர்த்தகத்தில், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி பங்குகள் அதிக விலை உயர்வை சந்தித்தன. இதையடுத்து ஆக்சிஸ் வங்கி, எச்.டி.எப்.சி., எஸ்.பி.ஐ., எல் அண்டு டி., ஓ.என்.ஜி.சி., இன்போசிஸ் ஆகிய நிறுவன பங்குகள் விலையும் அதிகரித்தன.
மாறாக, சன் பார்மா, ஏஷியன் பெயின்ட்ஸ், நெஸ்ட்லே இந்தியா, அல்ட்ராடெக் சிமென்ட், எச்.யு.எல்., ஆகிய நிறுவன பங்குகள் விலை சரிவைக் கண்டன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|