பதிவு செய்த நாள்
09 அக்2020
22:17
மும்பை:மிகக் குறைந்த அளவு தொகையை கடனாக வழங்கும், மைக்ரோபைனான்ஸ் நிறுவனங்கள், கடந்த ஜூன் மாதத்துடன் முடிந்வடைந்த காலண்டில், 6,046 கோடி ரூபாயை கடனாக வழங்கி இருக்கின்றன.
மதிப்பீட்டு காலாண்டில் இவை வழங்கிய கடன்கள், இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே காலக்கட்டத்தில் வழங்கிய கடனுடன் ஒப்பிடும்போது, 88 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது. இக்காலக்கட்டத்தில் மொத்தம், 52 ஆயிரத்து, 556 கோடி ரூபாய் கடனாக வழங்கப்பட்டு இருந்தது. மேலும், கடந்த ஜூன் காலாண்டில் வழங்கப்பட்ட கடன்களின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்துள்ளது.
மொத்தம், 21 லட்சம் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுவே, கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 189 லட்சமாக இருந்தது. கடந்த ஜூன் காலாண்டில், 20 ஆயிரம் ரூபாய்க்கும் கீழே வழங்கப்பட்ட கடன்களின் அளவு, மொத்த கடன்களின் எண்ணிக்கையில், 60 சதவீதம் அளவுக்கு உள்ளது.இதுவே, இதற்கு முந்தைய காலாண்டில், 15 சதவீதமாக இருந்தது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|