பதிவு செய்த நாள்
09 அக்2020
22:20
சென்னை:புதிய ‘கிரெட்டா’ கார் அறிமுகம் செய்யப்பட்ட 7 மாதத்தில், 1.15 லட்சம் கார்கள் முன்பதிவு செய்யப் பட்டுள்ளதாக, ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
‘ஆல் நியூ கிரெட்டா’ கார், மார்ச்சில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த கார் அறிமுகப்படுத்தியது முதல், தற்போது வரை, 1.15 லட்சம் வாடிக்கையாளர்கள், காரை வாங்குவதற்காக முன்பதிவு செய்துள்ளனர்.எஸ்.யு.வி., ரகத்தை சேர்ந்த இந்த கார், கடந்த செப்டம்பரில், 12 ஆயிரத்து, 325 கார்கள் விற்பனை செய்யப்பட்டு, புதிய சாதனை படைத்துள்ளது.
வாங்குவதற்காக அதிகம் விசாரித்தல் மற்றும் இணையதளத்தில் தேடப்பட்ட பட்டியலிலும் முதல் இடத்தில் உள்ளது. மேலும், காரை தேர்வு செய்வதில் துவங்கி, நிதியுதவி பெறுவது முதல், வாங்குவது வரையிலான அனைத்தையும் ஆன்லைனிலேயே செய்வதற்கான தளத்தில், 1,100 கார்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.இதில், 60 சதவீதம் டீசல் இன்ஜின் கார்களாகும்.
நடப்பு ஆண்டில், ஜனவரி முதல் செப்., வரை, எஸ்.யு.வி., ரக சந்தை பங்களிப்பில், கிரெட்டாவின் பங்கு, 26 சதவீதமாக உள்ளது என, ஹூண்டாய் மோட்டார் தெரிவித்துள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|