பதிவு செய்த நாள்
11 அக்2020
22:06
‘டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு’ போன்றவற்றின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான, ரிசர்வ் வங்கியின் புதிய நெறிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதன் படி, பயனாளிகள் கார்டு பயன்பாடு தொடர்பான வரையறையை தாங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம்.
இந்த நெறிமுறைகள், என்.எப்.சி., வசதி கொண்ட கார்டுகளுக்கும் பொருந்தும். இந்த கார்டுக்கான பரிவர்த்தனை வரம்பை தீர்மானிப்பதோடு, தேவைப்படும் போது இந்த கார்டை மட்டும் இயக்கி கொள்வது இனி சாத்தியமாகிறது. என்.எப்.சி., கார்டு தொடர்பான முக்கிய அம்சங்களை பார்க்கலாம்.
கார்டுகள் பலவிதம்:
பழைய டெபிட் கார்டுகள், காந்த பட்டை அடிப்படையில் செயல்படுகின்றன. தற்போது பரவலாக பயன்படுத்தப்படும், இ.வி.எம்., சிப் கொண்ட கார்டுகள் மேம்பட்ட பாதுகாப்பை கொண்டுள்ளன. இதே போல, என்.எப்.சி., எனப்படும் நியர் பீல்டு கம்யூனிகேஷன் வசதி கொண்ட கார்டு, அருகாமை வசதி அடிப்படையில் செயல்படுகிறது.
தொடு வசதி:
பொதுவாக பரிவர்த்தனையின் போது கார்டை, அதற்கான இயந்திரத்தில், ‘ஸ்வைப்’ செய்ய வேண்டும். ஆனால், அருகாமை வசதி கொண்ட என்.எப்.சி., கார்டு எனில், இயந்திரம் அருகே கொண்டு சென்றால் அதன் மீது தட்டினால் போதும், பணப் பரிவர்த்தனையை மேற்கொள்ளலாம். இது, தொடர்பில்லா பரிவர்த்தனை என்றும் அழைக்கப்படுகிறது.
மின்காந்த அலைகள்:
என்.எப்.சி., வசதி கொண்ட கார்டு மீது, அவற்றின் தொடர்பில்லாத அம்சத்தை குறிக்கும், ‘வைபை’ போன்ற குறியீடு இருக்கும். இதில் உள்ள சிப், மின்காந்த ரேடியோ அலைகள் மூலம் குறைந்த தொலைவில் தகவல்களை பரிமாறிக் கொள்ளும். இதன் அடிப்படையில் பரிவர்த்தனை நிகழ்கிறது. இது, பரிவர்த்தனையை எளிதாக்குகிறது.
பாதுகாப்பு அம்சம்:
வழக்கமான கார்டை விட, இந்த வகை கார்டு பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. மேலும், இந்த கார்டில், 2,000 ரூபாய்க்கு மேல் பரிவர்த்தனை செய்வது என்றால், ரகசிய எண் அல்லது ஒரு முறை, ‘பாஸ்வேர்டு’ போன்ற இரண்டு அடுக்கு பாதுகாப்பு அம்சத்தை இயக்கி கொள்ளலாம்.
கூடுதல் பாதுகாப்பு:
தற்போது அமலுக்கு வந்திருக்கும் புதிய நெறிமுறைகளின்படி, இந்த கார்டு வசதியை பயனாளிகள் எப்போது வேண்டுமானாலும் இயக்கி கொள்ளலாம். இதன் மூலம், தேவைப் படும் போது கார்டு வசதியை இயக்கி, மற்ற நேரங்களில் நிறுத்தியும் வைக்கலாம். இது, கூடுதல் பாதுகாப்பாக அமைகிறது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|