தங்க இ.டி.எப்., முதலீட்டில் ஆர்வம் தங்க இ.டி.எப்., முதலீட்டில் ஆர்வம் ...  உணவு வினியோக ‘ஆர்டர்’கள் அதிகரிப்பு உணவு வினியோக ‘ஆர்டர்’கள் அதிகரிப்பு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
என்.எப்.சி., வசதி கொண்ட கார்டை பயன்படுத்துவது எப்படி?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 அக்
2020
22:06

‘டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு’ போன்றவற்றின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான, ரிசர்வ் வங்கியின் புதிய நெறிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதன் படி, பயனாளிகள் கார்டு பயன்பாடு தொடர்பான வரையறையை தாங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம்.


இந்த நெறிமுறைகள், என்.எப்.சி., வசதி கொண்ட கார்டுகளுக்கும் பொருந்தும். இந்த கார்டுக்கான பரிவர்த்தனை வரம்பை தீர்மானிப்பதோடு, தேவைப்படும் போது இந்த கார்டை மட்டும் இயக்கி கொள்வது இனி சாத்தியமாகிறது. என்.எப்.சி., கார்டு தொடர்பான முக்கிய அம்சங்களை பார்க்கலாம்.


கார்டுகள் பலவிதம்:


பழைய டெபிட் கார்டுகள், காந்த பட்டை அடிப்படையில் செயல்படுகின்றன. தற்போது பரவலாக பயன்படுத்தப்படும், இ.வி.எம்., சிப் கொண்ட கார்டுகள் மேம்பட்ட பாதுகாப்பை கொண்டுள்ளன. இதே போல, என்.எப்.சி., எனப்படும் நியர் பீல்டு கம்யூனிகேஷன் வசதி கொண்ட கார்டு, அருகாமை வசதி அடிப்படையில் செயல்படுகிறது.


தொடு வசதி:


பொதுவாக பரிவர்த்தனையின் போது கார்டை, அதற்கான இயந்திரத்தில், ‘ஸ்வைப்’ செய்ய வேண்டும். ஆனால், அருகாமை வசதி கொண்ட என்.எப்.சி., கார்டு எனில், இயந்திரம் அருகே கொண்டு சென்றால் அதன் மீது தட்டினால் போதும், பணப் பரிவர்த்தனையை மேற்கொள்ளலாம். இது, தொடர்பில்லா பரிவர்த்தனை என்றும் அழைக்கப்படுகிறது.


மின்காந்த அலைகள்:


என்.எப்.சி., வசதி கொண்ட கார்டு மீது, அவற்றின் தொடர்பில்லாத அம்சத்தை குறிக்கும், ‘வைபை’ போன்ற குறியீடு இருக்கும். இதில் உள்ள சிப், மின்காந்த ரேடியோ அலைகள் மூலம் குறைந்த தொலைவில் தகவல்களை பரிமாறிக் கொள்ளும். இதன் அடிப்படையில் பரிவர்த்தனை நிகழ்கிறது. இது, பரிவர்த்தனையை எளிதாக்குகிறது.


பாதுகாப்பு அம்சம்:


வழக்கமான கார்டை விட, இந்த வகை கார்டு பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. மேலும், இந்த கார்டில், 2,000 ரூபாய்க்கு மேல் பரிவர்த்தனை செய்வது என்றால், ரகசிய எண் அல்லது ஒரு முறை, ‘பாஸ்வேர்டு’ போன்ற இரண்டு அடுக்கு பாதுகாப்பு அம்சத்தை இயக்கி கொள்ளலாம்.


கூடுதல் பாதுகாப்பு:


தற்போது அமலுக்கு வந்திருக்கும் புதிய நெறிமுறைகளின்படி, இந்த கார்டு வசதியை பயனாளிகள் எப்போது வேண்டுமானாலும் இயக்கி கொள்ளலாம். இதன் மூலம், தேவைப் படும் போது கார்டு வசதியை இயக்கி, மற்ற நேரங்களில் நிறுத்தியும் வைக்கலாம். இது, கூடுதல் பாதுகாப்பாக அமைகிறது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)