எதிர்கால முதலீடுகளுக்கு ஏற்ற நாடுகள்  முதல் மூன்று இடங்களில் இந்தியாஎதிர்கால முதலீடுகளுக்கு ஏற்ற நாடுகள் முதல் மூன்று இடங்களில் இந்தியா ... 'இனிமேல் ஸ்டோர்களை நடத்துவது எளிதாக இருக்காது' 'இனிமேல் ஸ்டோர்களை நடத்துவது எளிதாக இருக்காது' ...
நகரங்களில் வீடுகள் விற்பனை நடப்பு காலாண்டில் அதிகரிக்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 அக்
2020
02:44

புதுடில்லி : வரும் பண்டிகை காலம், ரியல் எஸ்டேட் துறைக்கு ஒரு முக்கியமான காலம். இதுவே, அடுத்த, 12 மாதங்களுக்கான தேவை குறித்த துறையின் பார்வையைத் தீர்மானிக்கும் என, ரியல் எஸ்டேட் தரகு நிறுவனமான, பிராப்டைகர் தெரிவித்துள்ளது.



மேலும், நடப்பு காலாண்டில் விற்பனை அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளது. நாட்டின், 8 முக்கிய நகரங்களில், செப்டம்பர் காலாண்டில் வீடுகள் விற்பனை குறித்த அறிக்கையை
இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:கடந்த ஜூலை - செப்டம்பர் காலாண்டில், 8 நகரங்களில், மொத்தம், 35 ஆயிரத்து, 132 வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதுவே, கடந்த ஆண்டு இதே காலாண்டில், மொத்தம், 81 ஆயிரத்து, 886 வீடுகள் விற்பனை ஆகியிருந்தன. இருப்பினும், ஏப்ரல் - ஜூன் காலாண்டினை விட, மதிப்பீட்டு காலாண்டில், விற்பனை, 85 சதவீதம் அதிகரித்துள்ளது.


சென்னை, பெங்களூரு, ஐதராபாத், கோல்கட்டா, டில்லி தலைநகர் பிராந்தியம், மும்பை
பெருநகர பிராந்தியம், அகமதாபாத், புனே ஆகிய, 8 நகரங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன. சென்னையில், 40 சதவீதம் அளவுக்கு சரிவு காணப்பட்டுள்ளது. ஐந்து ஆண்டுகளில், வீட்டு விலைகள் நிலையானதாக இருப்பதோடு, வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதங்கள், 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைவாக இருக்கும் நிலை உள்ளது. இதனால், நடப்பு காலாண்டில் விற்பனை கணிசமாக உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)