நகரங்களில் வீடுகள் விற்பனை நடப்பு காலாண்டில் அதிகரிக்கும்நகரங்களில் வீடுகள் விற்பனை நடப்பு காலாண்டில் அதிகரிக்கும் ...  ரிலையன்சுக்கு போட்டியாக டாடா சில்லரை வணிகங்களை வளைக்க முயற்சி ரிலையன்சுக்கு போட்டியாக டாடா சில்லரை வணிகங்களை வளைக்க முயற்சி ...
'இனிமேல் ஸ்டோர்களை நடத்துவது எளிதாக இருக்காது'
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 அக்
2020
02:46

புதுடில்லி : கொரோனாவால் பலத்த நஷ்டம் ஏற்பட்டதால், சில்லரை மற்றும் மொத்த வணிகத்தை, 'ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்' நிறுவனத்துக்கு விற்பனை செய்யும் நிலை ஏற்பட்டதாக, 'பியூச்சர்' குழுமத்தின் நிறுவனர் கிஷோர் பியானி தெரிவித்துள்ளார்.


இது குறித்து, அவர் மேலும் தெரிவித்து உள்ளதாவது: கொரோனா பாதிப்புகள் துவங்கிய முதல் நான்கு மாதங்களில், 7,000 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் இழப்பை சந்திக்க வேண்டியதாகி விட்டது. இவ்வளவு பெரிய இழப்புடன், நிறுவனம் தாக்குப்பிடிப்பது என்பது இயலாத
விஷயம். மேலும், வாடகையை தொடர்ந்து கொடுக்க வேண்டும். வாங்கிய கடனுக்கான வட்டியையும் தொடர்ந்து செலுத்த வேண்டும் என்ற நிலை. கடந்த ஆறேழு ஆண்டுகளில், நிறைய நிறுவனங்களை கையகப்படுத்தி இருக்கிறோம் நாங்கள். ஆனால், இப்போது வணிகத்தை விட்டு வெளியேறுவதை தவிர, வேறு விடை இல்லை.


சில்லரை வணிகத்தில் ஈடுபட்டுள்ளோருக்கு, இனி தான் சிரமமான காலம். எங்கள் இலக்கில், 90 சதவீதத்தை அடையும் வகையில் வணிகத்தை வடிவமைத்திருந்தோம். ஆனால், எந்த நிலையிலும், 70 - 80 சதவீதத்தை கூட தொட இயலவில்லை. இன்னும் நீண்ட காலத்தில், அதாவது, 5 முதல், 10 ஆண்டுகளில், 'ஆன்லைன்' தாக்கத்தால், ஸ்டோர்களை நடத்துவது அவ்வளவு எளிதாக இருக்காது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கடந்த ஆகஸ்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பியூச்சர் குழுமத்தின் சில்லரை மற்றும் மொத்த விற்பனை வணிகத்தையும், கிடங்கு வணிகத்தையும், 24 ஆயிரத்து, 713 கோடி ரூபாய்க்கு கையகப்படுத்தியது. இதையடுத்து, 'பிக் பஜார், பேண்டலுான்' உள்ளிட்ட வணிகங்கள், ரிலையன்ஸ் வசம் வந்தன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)