பதிவு செய்த நாள்
16 அக்2020
01:28
மும்பை :தொடர்ந்து உயர்ந்து வந்த இந்திய பங்குச் சந்தைகள், நேற்று கடுமையான சரிவைக் கண்டன. உலக சந்தைகளில் விற்கும் போக்கு அதிகரித்ததை ஒட்டி, இந்திய முதலீட்டாளர்களும் தங்கள் பங்குகளை விற்று வெளியேறுவதில் ஆர்வம் காட்டினர். இதனால் சந்தைகள் சரிந்தன.
இதையடுத்து, இந்திய முதலீட்டாளர்கள் நேற்று மட்டும், 3.25 லட்சம் கோடி ரூபாயை இழந்தனர்.மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ், 1,066.33 புள்ளிகள் சரிந்து, 39728.41 புள்ளிகளில் நிலைபெற்றது. இதேபோல் தேசிய பங்குச் சந்தையின் நிப்டியும், 290.70 புள்ளிகள் சரிந்து, 11680.35 புள்ளிகளில் நிலைபெற்றது.
அமெரிக்காவில் தேர்தலுக்கு முன்னதாக நிதிஊக்க சலுகைகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை குறைந்தது, ஐரோப்பிய நாடுகளில் தொற்று அதிகரிப்பதால், ஊரடங்கு பிறப்பிக்கும் நிலை ஏற்பட்டிருப்பது ஆகிய காரணங்களால், சந்தைகள் சரிந்தன. அதன் தாக்கம் இந்திய சந்தைகளிலும் பிரதிபலித்தன.
மும்பை சந்தையின் சென்செக்ஸ் பிரிவில், ஏஷியன் பெயின்ட்ஸ் பங்குகள் மட்டும், 0.32 சதவீதம் என்ற மிகச் சிறிய அளவில் விலை அதிகரித்தன. மற்ற நிறுவன பங்குகள் அனைத்தும் சரிவையே கண்டன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|