பதிவு செய்த நாள்
16 அக்2020
01:30
ஜெய்ப்பூர்: கொரோனா பரவல் காரணமாக, கடந்த, 5 மாதங்களில், சைக்கிள் விற்பனை இரு மடங்கு அதிகரித்துள்ளது.கொரோனா காலத்தில், மக்கள் பொது போக்குவரத்தை தவிர்க்கும் வகையிலும், சகாயமானதாக இருக்கிறது என்பதாலும், சைக்கிளை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக, கடந்த, 5 மாதங்களில், சைக்கிள் விற்பனை இரு மடங்கு அதிகரித்துள்ளது. பல நகரங்களில், மக்கள் அவர்கள் விருப்பத்திற்கேற்ற சைக்கிளை வாங்குவதற்காக
காத்திருப்பதாக தயாரிப்பு நிறுவனங்கள்தெரிவிக்கின்றன. இது போன்ற நிலை, நாட்டில் முதன் முறையாக உருவாகி இருப்பதாகவும் அவை தெரிவிக்கின்றன.
கடந்த மே முதல் செப்டம்பர் வரையிலான, 5 மாத காலத்தில், விற்பனை மொத்தம்,
41.81 லட்சமாக உயர்ந்திருப்பதாக அகில இந்திய சைக்கிள் தயாரிப்பாளர்கள் சங்கம்
தெரிவித்துள்ளது.கடந்த மே மாதத்தில், சைக்கிள் விற்பனை, 4.57 லட்சமாக இருந்த நிலையில், ஜூன் மாதத்தில், இரு மடங்கு உயர்ந்து, 8.51 லட்சமாக அதிகரித்தது. செப்டம்பர் மாதத்தில் மட்டும், 11.22 லட்சம் சைக்கிள்கள் விற்பனை ஆகியிருக்கின்றன.
இந்த விற்பனை அதிகரிப்பு குறித்து, சங்கத்தின் பொதுச் செயலர் கே.பி. தாக்கூர்
கூறியதாவது:கடந்த, 5 மாதங்களில், சைக்கிள் விற்பனை கிட்டத்தட்ட, 100 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. பல இடங்களில் மக்கள் முன்பதிவு செய்துகாத்திருக்கிறார்கள்.அனேகமாக இந்த அளவுக்கு தேவை அதிகரித்திருப்பது, வரலாற்றில் முதல் முறையாக இருக்கக்கூடும். கொரோனா காலத்தில், பிற பொது மற்றும் சொந்த வாகனங்களை விட, தனிமனித இடை வெளியை பாதுகாக்க, சைக்கிள் தான் சிறந்த வாகனமாக மக்கள் கருதுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|