பதிவு செய்த நாள்
16 அக்2020
01:31
மும்பை : எக்விடாஸ் ஸ்மால் பைனான்ஸ் பேங்க், 20ம் தேதி பங்கு வெளியீட்டுக்கு வரும் நிலையில், அதன் பங்கு விலையை, ஒரு பங்குக்கு, 32 – 33 ரூபாய் என நிர்ணயித்து
அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டின் மூலம், 500 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டு உள்ளது. இதையடுத்து இதன் பங்கு வெளியீடு, 20ம் தேதி துவங்கி, 22ம் தேதியுடன்
முடிவடைகிறது.இந்த பங்கு வெளியீட்டின்போது, 280 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளையும், வங்கியின் தாய் நிறுவனமான, ஈக்விடாஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் வசம் இருக்கும்,
7.2 கோடி பங்குகளையும்விற்பனைக்கு விடுக்க இருக்கிறது.
வங்கியில், 95.49 சதவீதமாக இருக்கும் ஈக்விடாஸ் ஹோல்டிங் நிறுவனத்தின் பங்குகள்
எண்ணிக்கை, பங்கு வெளியீட்டினை அடுத்து, 82 – 83 சதவீதமாக குறையும்.திரட்டப்படும் நிதியை, வங்கியின் மூலதன வளர்ச்சிக்காக பயன்படுத்தப்படும் என வங்கியின் தலைமை செயல் அதிகாரி பி.என்., வாசுதேவன் தெரிவித்துள்ளார்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|