தங்கம் விலை அதிரடி வீழ்ச்சி : ஒரேநாளில் சவரன் ரூ.1,464 சரிவுதங்கம் விலை அதிரடி வீழ்ச்சி : ஒரேநாளில் சவரன் ரூ.1,464 சரிவு ...  அன்னிய செலாவணி இருப்பு தொடர்ந்து  அதிகரிப்பு அன்னிய செலாவணி இருப்பு தொடர்ந்து அதிகரிப்பு ...
மீட்சிக்கான அறிகுறிகள் பலமாக தென்படுகின்றன பொருளாதார வளர்ச்சி குறித்து ஆய்வறிக்கை தகவல்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 அக்
2020
22:22

புதுடில்லி:கடந்த ஆறு மாதங்களாக, மிகுந்த அழுத்தத்தில் இருந்த நாட்டின் பொருளாதாரம், தற்போது மீட்சியடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. இருப்பினும், மீட்சி பலவீனாமாக இருப்பதற்கான அறிகுறிகளும் உள்ளன என, தர நிர்ணய நிறுவனமான, ‘பிரிக்வொர்க்ஸ் ரேட்டிங்ஸ்’ தெரிவித்துள்ளது.

மேலும், செப்டம்பர் காலாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 13.5 சதவீதம் அளவுக்கு சரிவைக் காணும் என்றும் கணித்துள்ளது. அத்துடன், பொருளாதார மீட்சிக்கான நடவடிக்கைகளை அரசு உடனே மேற்கொள்ளாதபட்சத்தில், நடப்பு நிதியாண்டில் வளர்ச்சி, 9.5 சதவீதம் அளவுக்கு சரிவைக் காணும் என்றும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:நாட்டின் பொருளாதாரம் மீட்சியடைவதற்கான அறிகுறிகள் பலமாக தென்படுகின்றன. நாட்டின் தயாரிப்புத் துறை உற்பத்தி வளர்ச்சி, ஆகஸ்டில், 52 சதவீதமாக இருந்தது; செப்டம்பரில், 56.8 சதவீதமாக உயர்ந்துள்ளது.மேலும், ஜி.எஸ்.டி., வசூல், 95 ஆயிரத்து, 480 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, ஆகஸ்ட் மாத வசூலை விட, 10 சதவீதம் அதிகமாகும்.


மேலும், கடந்த ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது, 3.8 சதவீதம் உயர்வாகும். இதேபோல், பயணியர் வாகன விற்பனையும், 31 சதவீதம் அதிகரித்துள்ளது. கூடவே, ரயில்வே சரக்கு போக்குவரத்தும், 15 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. அதுமட்டுமல்ல; ஏற்றுமதியும், 5 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது.

இவை போன்ற அறிகுறிகள், பொருளாதாரம் மீட்சி காண்பதை அறிவிப்பதாக இருக்கிறது. இருப்பினும், சில அறிகுறிகள், மீட்சி பலவீனமாக இருப்பதையும் காட்டும் விதமாக இருக்கின்றன.புதிய திட்டங்களில் மூலதன செலவுகள், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இரண்டாவது காலாண்டில், 81 சதவீதம் சரிவைக் கண்டுள்ளன.


முதலீடுகள் தொடர்ந்து குறைந்து வருகின்றன.முக்கிய எட்டு தொழில்துறைகளில், உற்பத்தி வளர்ச்சி, ஆகஸ்ட் மாதத்தில் மைனஸ், 8.5 சதவீதமாக இருக்கிறது. எண்ணெய் அல்லாத தங்கம் அல்லாதவற்றின் இறக்குமதியும் சரிவைக் கண்டுள்ளது.பொருளாதார வளர்ச்சி காணப்பட்டாலும், கடும் சரிவை சந்தித்திருக்கும் கட்டுமானம், விருந்தோம்பல், போக்குவரத்து, கிடங்கு போன்ற துறைகள் மெதுவாகவே மீட்சியைக் காணும்.எளிதாக தொழில் செய்வது, அரசு தொழிலாளர் சட்டத்தில் சீர்திருத்தம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.


இருப்பினும், பொருட்களை வினியோகம் செய்வதில் இருக்கும் தடைகளை உடனடியாக சரிசெய்து, தேவையை அதிகரிக்கும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.இப்படிப்பட்ட முயற்சிகள் மூலமாக, பொருளாதார மீட்சியை அரசு விரைவுபடுத்த வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எளிதாக தொழில் செய்வது, அரசு தொழிலாளர் சட்டத்தில் சீர்திருத்தம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இருப்பினும், பொருட்களை வினியோகம் செய்வதில் இருக்கும் தடைகளை உடனடியாக சரிசெய்து, தேவையை அதிகரிக்கும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)