பதிவு செய்த நாள்
20 அக்2020
22:27
புதுடில்லி:பிரபல பிஸ்கட் தயாரிப்பு நிறுவனமான, ‘மிஸஸ் பெக்டர்ஸ் புட் ஸ்பெஷாலிட்டிஸ்’ நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, செபிக்கு விண்ணப்பித்துள்ளது.இந்நிறுவனம், புதிய பங்குவெளியீட்டின் மூலம், 550 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதில், 50 கோடி ரூபாய்க்கு புதிய பங்கு களையும்; நிறுவனர்கள்வசம் இருக்கும் பங்கு களில், 500 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளையும் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.லினஸ், மேபெல், ஜி.டபுள்யு., கன்பெக்ஷனரி, ஜி.டபுள்யு., கிரவுன் ஆகிய நிறுவனங்கள் தங்கள் வசம் இருக்கும் பங்குகளை விற்பனை செய்ய இருக்கின்றன.பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டப்படும் நிதியை, ஆலையின் உற்பத்தி வசதியை விரிவுபடுத்துவதற்காக செலவிட திட்டமிடப்பட்டு உள்ளது.
இதன் மூலம், இந்த ஆலையில் புதிய வகையான பிஸ்கட்டுகள் தயாரிக்கப்பட இருக்கின்றன.புதிய பங்கு வெளியீட்டுக்கான பணிகளை, எஸ்.பி.ஐ., கேப்பிட்டல் மார்கெட்ஸ், ஐ.சி.ஐ.சி.ஐ., செக்யூரிட்டீஸ், ஐ.ஐ.எப்.எல்., செக்யூரிட்டீஸ் ஆகிய நிறுவனங்கள் நிர்வகிக்க உள்ளன.இங்கிலீஷ் ஓவன், மிஸஸ் பெக்டர்ஸ் கிரீமிகா ஆகியவை இந்நிறுவனத்தின் புகழ்பெற்ற பிராண்டுகளாகும்.
பிஸ்கட், பிரட், பன் ஆகியவை இங்கு தயாரிக்கப்படுகின்றன. கடந்த, 2018ல், 800 கோடி ரூபாய் திரட்ட பங்கு வெளியீட்டுக்கு வர அனுமதி பெற்றது. ஆனால், சந்தை நிலவரம் சாதகமாக இல்லாத காரணத்தால், அப்போது பங்கு வெளியீட்டுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|