பதிவு செய்த நாள்
20 அக்2020
22:32
புதுடில்லி:உரிம அளவை விட, அதிகமாக உற்பத்தி செய்தற்காக, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீசுக்கு ஒரு காலத்தில் அபராதம் விதிக்கப்பட்டது. அப்படி ஒரு காலம் இருந்தது என, இந்நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி கூறியுள்ளார்.
புத்தக அறிமுக விழா ஒன்றில் கலந்துகொண்டு, அவர் காணொலி மூலம் இப்படி தெரிவித்தார். அவர் மேலும் பேசியதாவது:தொழில்நுட்பத் துறையில், இப்போது,‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள் இருப்பதை போல தயாரிப்பு துறையில் இருக்கும் குறு, சிறு, நடுத்தர தொழில் பிரிவிலும்,‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள் அதிகம் வரவேண்டும். நாம் தொழில்நுட்ப துறையில் மட்டுமின்றி; தயாரிப்பு துறையிலும் சிந்திக்க வேண்டும். அப்போது தான், அரசின் சுயசார்பு திட்டமான, ‘ஆத்மநிர்பர்’ வெற்றி பெறும்.
ஒரு ஆசிரியரின் மகனான, என்னுடைய அப்பா திருபாய் அம்பானி, இந்தியர்களின் கனவு நகரமான மும்பையில் வாழ 1960ல் வந்தார். வரும்போது கையில், 1,000 ரூபாயுடன் வந்தார்.
இணைத்து விட்டது
இந்த தொகையை நல்ல எதிர்காலமும் திறனும் கொண்ட வணிகத்தில் முதலீடு செய்தால், இந்தியர்களுக்கான கனவை நாமே உருவாக்கலாம் என எண்ணினார்.இதன் தொடர்ச்சியாகத் தான், ஒரு அஞ்சல் அட்டைக்கு ஆகும் செலவில், ஒருவர் பிறருடன் பேச முடியுமா என்ற கேள்வியையும் அவர் எழுப்பினார்.இன்றைக்கு, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இந்தியாவின் அதிக மதிப்பு கொண்ட நிறுவனமாக இருக்கிறது.
தாராளமயமாக்கல் காலத்துக்கு முன், உரிமம் வழங்கப்பட்ட உற்பத்தி அளவுக்கும் மேல் அதிகமாக உற்பத்தி செய்த காரணத்துக்காக, அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டு, ரிலையன்சுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.அதன்பின், 1991ல், தாராளமயமாக்கல் அறிமுகம் ஆன பிறகு, இந்தியாவில் உற்பத்தி பெருமளவு அதிகரித்தது. இப்போது ஒவ்வொன்றும் கூடுதல் உற்பத்தியுடன் இணைத்தே பார்க்கப்படுகிறது.
இதிலிருந்தே நாம் அறிந்துகொள்ளலாம், நம் சிந்தனை எப்படி மாறியிருக்கிறது என்பதை. தாராளமயமாக்கலுக்கு முன், 20 ஆயிரம், 30 ஆயிரம் டன் பாலியெஸ்டர் உற்பத்தி திறனுக்காக போராட வேண்டியதாக இருந்தது. ஆனால், இப்போது, உலகில் அதிகளவு பாலியெஸ்டர் தயாரிக்கும் இரண்டு நாடுகளில் ஒன்றாக, இந்தியா உயர்ந்திருக்கிறது.
கொரோனா பாதிப்பு மிக தீவிரமாக இருந்த காலத்திலும், முழு கவச உடையை, நாம் குறைந்த அவகாசத்தில், பெருமளவு தயாரித்தோம்.அப்படித் தான் தொலைதொடர்பு துறையிலும். ஒருவருக்கு அஞ்சல் அட்டை மூலமாக தெரிவிக்க வேண்டிய விஷயத்தை, அதே காசில், அவருடன் உரையாடி தெரிவிக்க முடிந்தால் எப்படி இருக்கும் என்ற கேள்வியை எழுப்பினார், திருபாய் அம்பானி.இப்போது அது இலவசமாகவே ஆகிவிட்டது.நாம் எதிர்காலத்தை நோக்கி பயணிக்கத் துவங்கி விட்டோம். அது ஒருவரைஒருவருடன் மட்டுமல்ல; ஓராயிரம் விஷயங்களுடன் இணைத்துவிட்டது.
சிந்தனை
அடுத்த சில பத்தாண்டுகளில், நமது நாடு, முழுக்க புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை கொண்டு சுய சார்புடையதாகிவிடும்.இப்போது இந்தியா, உற்பத்தி குறித்த தன்னுடைய சிந்தனையை மறுபரிசீலனை செய்து, புதுப்பிக்க வேண்டும். எதிர்கால தொழில்கள் மற்றும் எதிர்கால சேவைகளை வழங்கும் சூழல் குறித்த மறு சிந்தனை தேவை.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|