‘அதிகமாக உற்பத்தி செய்த காரணத்துக்காக  ரிலையன்சுக்கு அபராதம் விதிக்கப்பட்டது’ ‘அதிகமாக உற்பத்தி செய்த காரணத்துக்காக ரிலையன்சுக்கு அபராதம் ... ...  ரிலையன்ஸ் ஜியோ 5ஜி முயற்சி வெற்றி ரிலையன்ஸ் ஜியோ 5ஜி முயற்சி வெற்றி ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
நேரடி அன்னிய முதலீடு 16 சதவீதம் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 அக்
2020
00:41

புதுடில்லி:கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலத்தில், அன்னிய நேரடி முதலீடு, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, 16 சதவீதம் உயர்ந்து, 1.98 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

இது குறித்து, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது: ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலத்தில், அன்னிய நேரடி முதலீடு, 16 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் இதுவே, 1.70 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.வருவாயை மறுமுதலீடு செய்யப்பட்டதையும் சேர்த்து, மொத்த அன்னிய நேரடி முதலீடு, 13 சதவீதம் அதிகரித்து, 2.61 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

ஒரு நிதியாண்டில், முதல், 5 மாதங்களில் இந்த அளவுக்கு முதலீடு வந்திருப்பது, இதுவே முதன் முறையாகும். கடந்த நிதியாண்டில், இதே, 5 மாதங்களில், 2.31 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.கடந்த, 6 ஆண்டுகளில், அன்னிய நேரடி முதலீடு வரத்து, 55 சதவீதம் அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டு கொரோனா காலத்திலும் பாதிப்புகளை மீறி, 13 சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்தியா, அன்னிய நேரடி முதலீடுகளை அதிகம் ஈர்க்க கூடிய நாடாக இருக்கிறது.அன்னிய முதலீடு, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு கடனாக அல்லாமல் வரும் வாய்ப்பாகும். அதனால், முதலீட்டு நடைமுறைகளில் இருந்த தடைகள் நீக்கப்பட்டு எளிதாக்கப்பட்டுள்ளது.அரசு கடந்த, 6 ஆண்டுகளில் எடுத்த முயற்சிகளுக்கு வெற்றி கிடைத்து வருகிறது.இவ்வாறு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)