பதிவு செய்த நாள்
22 அக்2020
00:41
புதுடில்லி:கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலத்தில், அன்னிய நேரடி முதலீடு, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, 16 சதவீதம் உயர்ந்து, 1.98 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இது குறித்து, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது: ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலத்தில், அன்னிய நேரடி முதலீடு, 16 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் இதுவே, 1.70 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.வருவாயை மறுமுதலீடு செய்யப்பட்டதையும் சேர்த்து, மொத்த அன்னிய நேரடி முதலீடு, 13 சதவீதம் அதிகரித்து, 2.61 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
ஒரு நிதியாண்டில், முதல், 5 மாதங்களில் இந்த அளவுக்கு முதலீடு வந்திருப்பது, இதுவே முதன் முறையாகும். கடந்த நிதியாண்டில், இதே, 5 மாதங்களில், 2.31 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.கடந்த, 6 ஆண்டுகளில், அன்னிய நேரடி முதலீடு வரத்து, 55 சதவீதம் அதிகரித்துள்ளது. நடப்பு நிதியாண்டு கொரோனா காலத்திலும் பாதிப்புகளை மீறி, 13 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்தியா, அன்னிய நேரடி முதலீடுகளை அதிகம் ஈர்க்க கூடிய நாடாக இருக்கிறது.அன்னிய முதலீடு, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு கடனாக அல்லாமல் வரும் வாய்ப்பாகும். அதனால், முதலீட்டு நடைமுறைகளில் இருந்த தடைகள் நீக்கப்பட்டு எளிதாக்கப்பட்டுள்ளது.அரசு கடந்த, 6 ஆண்டுகளில் எடுத்த முயற்சிகளுக்கு வெற்றி கிடைத்து வருகிறது.இவ்வாறு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|