பதிவு செய்த நாள்
22 அக்2020
00:48
மும்பை:தொடர்ந்து நான்காவது வர்த்தக நாளாக, நேற்றும் இந்திய பங்குச் சந்தைகள் உயர்வைக் கண்டன. வங்கிகள் மற்றும் உலோக துறை சார்ந்த நிறுவன பங்குகள் விலை அதிகரித்தது, பங்குச் சந்தை உயர்வுக்கு வழிவகுத்தது.
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ், வர்த்தகத்தின் இடையே, 825.54 வரை அதிகரித்து, வர்த்தக இறுதியில், 162.94 புள்ளிகள் உயர்வுடன், 40707.31 புள்ளியில் நிலைபெற்றது.இதை போலவே, தேசிய பங்குச் சந்தையின் நிப்டி, 40.85 புள்ளிகள் அதிகரித்து, 11937.65 புள்ளிகளில் நிலைபெற்றது.
சென்செக்ஸ் பிரிவில், பவர்கிரிட் நிறுவன பங்குகள், 4 சதவீதம் விலை உயர்ந்தன. இதையடுத்து, பார்தி ஏர்டெல், டாடா ஸ்டீல், என்.டி.பி.சி., எச்.டி.எப்.சி., வங்கி, அல்ட்ராடெக் சிமென்ட், கோட்டக் பேங்க் ஆகிய நிறுவன பங்குகள் விலையும் அதிகரித்தன.
மாறாக, டி.சி.எஸ்., நெஸ்ட்லே இந்தியா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எச்.சி.எல்., டெக் ஆகிய நிறுவன பங்குகள் விலை சரிவைக் கண்டன.பல நிறுவன பங்குகள், லாபத்தை பெற்றுக்கொள்ள விற்பனை செய்யப்பட்டபோதும், உலோகம் மற்றும் வங்கிப் பங்குகள், சந்தை சரியாமல் தாக்குப் பிடிக்க உதவி செய்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|