பதிவு செய்த நாள்
22 அக்2020
21:48
புதுடில்லி:கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரை, ரியல் எஸ்டேட் துறையில் நம்பிக்கை குறைவு நிலவினாலும்,அடுத்த ஆறு மாதங்களில் நிலைமையில் முன்னேற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளதாக, ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
சொத்து ஆலோசனை நிறுவனமான நைட்பிராங், இந்திய வர்த்தக சபைகளின் கூட்டமைப்பான பிக்கி, தேசிய ரியல் எஸ்டேட் மேம்பாட்டு கவுன்சில் ஆகியவை இணைந்து மேற்கொண்ட ஆய்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கடந்த செப்டம்பர் காலாண்டில், 40 புள்ளிகளாக நம்பிக்கை அதிகரித்துள்ளது. இதுவே, அதற்கு முந்தைய காலாண்டில், 22 புள்ளிகளாக குறைந்திருந்தது.
இருப்பினும், எதிர்கால நம்பிக்கை புள்ளிகள், 52 புள்ளிகளாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.நம்பிக்கை குறியீட்டில், 50 புள்ளிகளுக்கு அதிகமிருப்பின் நம்பிக்கையாக இருப்பதாகவும்; 50 புள்ளிகளுக்கு கீழ் இருப்பின் அவநம்பிக்கையுடன் இருப்பதாகவும் கருதப்படும்.இதை வைத்து பார்க்கும் போது, அடுத்த ஆறு மாதங்களில் ரியல் எஸ்டேட் துறையில் மீட்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|