நாளைய பொருளாதாரத்தைதீர்மானிக்கும், 20 சந்தைகள் நாளைய பொருளாதாரத்தைதீர்மானிக்கும், 20 சந்தைகள் ... போர்ப்ஸ் பட்டியலில்  என்.டி.பி.சி., இடம் பெற்றது போர்ப்ஸ் பட்டியலில் என்.டி.பி.சி., இடம் பெற்றது ...
வர்த்தகம் » சந்தையில் புதுசு
ஸ்மார்ட்போன்கள் விற்பனை அதிகரிப்பு சீன பங்களிப்பில் சிறிது சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 அக்
2020
21:53

புதுடில்லி:ஊரடங்கு உத்தரவுகள் காரணமாக, சரிவைக் கண்டிருந்த ஸ்மார்ட்போன்கள் விற்பனை, கடந்த செப்டம்பர் காலாண்டில் மீண்டும் அதிகரித்துள்ளது. இக்காலாண்டில், இதுவரை இல்லாத அளவுக்கு விற்பனை அதிகரித்து, 5 கோடியாக உயர்ந்து, சாதனை படைத்துள்ளது.


மொத்தம் விற்பனை ஆன போன்களில், சீன போன்களின் எண்ணிக்கை மட்டும், 76 சதவீதமாகும்.தொழில்நுட்ப சந்தை பகுப்பாய்வு நிறுவனமான,‘கேனலிஸ்’ மேற்கொண்ட ஆய்வில் இவ்வாறு தெரியவந்துள்ளது.இது குறித்து, இந்த ஆய்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த ஜூலை – செப்டம்பர் காலாண்டில், நாட்டில் மொத்தம், 5 கோடி ஸ்மார்ட் போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.இது வரலாறு காணாத சாதனையாகும். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இது, 8 சதவீத வளர்ச்சியாகும். கடந்த ஆண்டு இதே காலத்தில், மொத்தம், 4.62 கோடி போன்கள் விற்பனை ஆகியிருந்தன.கடந்த செப்டம்பர் காலாண்டில் விற்பனை ஆன போன்களில், 76 சதவீதம், சீன நிறுவனங்களின் தயாரிப்புகளாகும். கடந்த ஆண்டில், இதே காலத்தில் இவற்றின் பங்களிப்பு, 74 சதவீதம் ஆகும். தற்போது, 2 சதவீதம் அதிகரித்துள்ளது.இருப்பினும், ஜூன் காலாண்டுடன் ஒப்பிடும்போது குறைவாகும். கடந்த ஜூன் காலாண்டில், சீன போன்களின் பங்களிப்பு, 80 சதவீதமாகும்.


சயோமி, சாம்சங், ரியல்மி, ஒப்போ ஆகிய நிறுவனங்களின் விற்பனை, கடந்த ஆண்டு இதே காலத்தை விட அதிகரித்துள்ளது.ஆப்பிள் நிறுவனத்தின், ஐபோன் விற்பனையும் இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டியுள்ளது. மதிப்பீட்டு காலாண்டில் கிட்டத்தட்ட, 8 லட்சம் போன்கள் விற்பனை ஆகியுள்ளன.இவ்வாறு ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் போன் விற்பனை நிலவரம் குறித்து, கேனலிஸ் நிறுவனத்தின் ஆராய்ச்சி பகுப்பாளரான வருண் கண்ணன் கூறியதாவது:கடந்த சில மாதங்களாக, இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் நடந்து வரும் பதற்றம், ஒரு பரபரப்பான விஷயமாக உள்ளது. ஆனால், மக்கள் பொருட்களை வாங்கும் முடிவுகளில், இன்னும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை காணமுடியவில்லை.அரசாங்கம் மூன்று மாத ஊரடங்குக்கு பிறகு தளர்வுகளை அதிகரித்து, நிலையான வளர்ச்சிக்கான, சரியான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.

ஏறக்குறைய அனைத்து விற்பனையாளர்களும், தயாரிப்பாளர்களும் வளர்ச்சியைக் காட்டியிருக்கின்றனர். விற்பனையில் உண்மையான வெற்றியாளர்கள், ஆன்லைன் விற்பனை நிறுவனங்கள் ஆகும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement

மேலும் சந்தையில் புதுசு செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)