பதிவு செய்த நாள்
22 அக்2020
22:48
புதுடில்லி : பொதுத்துறை நிறுவனமான, என்.டி.பி.சி., 2020ம் ஆண்டில், உலகின் சிறந்த பணி வழங்கும் நிறுவனங்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.
பிரபல போர்ப்ஸ் இதழ், நடப்பு ஆண்டில், உலகின் சிறந்த பணிவழங்கும் நிறுவனங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில்இடம்பெற்றதுடன், இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களில் முதல் இடத்தையும், என்.டி.பி.சி., பிடித்துள்ளது.இது குறித்து, என்.டி.பி.சி., நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:போர்ப்ஸ் பட்டியலில், குறிப்பிடத்தக்க இடத்தை பிடித்திருப்பது, நிறுவனத்தின் செயல்பாட்டுக்கு கிடைத்து இருக்கும் சான்றாகும்.
ஊரடங்கு கட்டத்திலும்; அதற்கடுத்து அறிவிக்கப்பட்ட தளர்வுகள் காலத்திலும், சூழ்நிலைக்கேற்ப வளர்ச்சியை எட்டுவதற்கு தகுந்த வகையில், நிறுவனம் தன்னை வடிவமைத்துக் கொண்டிருக்கிறது.
ஆயிரக்கணக்கான ஊழியர்களின் வாழ்க்கையை, தீவிர டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் ஆன்லைன் பயிற்சிகள் மூலம் நிறுவனம் வளப்படுத்தியதும் குறிப்பிடத்தக்கதாகும். இதன் மூலம், தொலை துாரங்களிலிருந்தும் அவர்கள் சேவைகளை வழங்க முடிந்தது.இவ்வாறு என்.டி.பி.சி., தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|