பதிவு செய்த நாள்
22 அக்2020
22:51
புதுடில்லி,: அன்னிய முதலீட்டு நிறுவனங்கள், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில், தங்கள் முதலீடுகளை அதிகரித்துள்ளன.
செப்டம்பருடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில், இந்நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை, 25.2 சதவீதமாக அதிகரித்துள்ளன.நிறுவனத்தின் பங்குதாரர்கள் குறித்து, நேற்று தாக்கல் செய்த அறிக்கையில், ரிலையன்ஸ் இவ்வாறு தெரிவித்துள்ளது.இவ்வறிக்கையில் அன்னிய முதலீட்டு நிறுவனங்கள், 165.8 கோடி ரூபாய் அளவுக்கு முதலீட்டை மேற்கொண்டுள்ளதாகவும், இது, 25.2 சதவீதமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவே, கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், முதலீடு, 163.07 கோடி
ரூபாயாக இருந்தது. இது, 24.72 சதவீதமாகும்.இது குறித்து, மியூச்சுவல் பண்டு நிறுவனமான ஜே.பி., மார்கன், முதலீட்டாளர்களுக்கு அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுஉள்ளதாவது:கடந்த இரண்டு ஆண்டுகளில், ரிலையன்சில் அன்னிய முதலீட்டு நிறுவனங்களின் பங்கு அதிகரித்து வருகிறது.
அதேசமயம் மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின்முதலீடுகள் குறைந்து வருகின்றன.செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீசில்,
மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின் முதலீடு, 5.12 சதவீதமாக உள்ளது. ஜூன் காலாண்டில் இதுவே, 5.37சதவீதமாக இருந்தது.இவ்வாறு, தெரிவித்து உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|