பதிவு செய்த நாள்
23 அக்2020
11:24
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் நேற்று சரிவை சந்தித்த நிலையில் இன்று(அக்., 23) மீண்டன. வர்த்தகநேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 228.56 புள்ளிகள் உயர்ந்து 40,787.05ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 41.20 புள்ளிகள் உயர்ந்து 11,896.45ஆக வர்த்தகமாகின. எச்டிஎப்சி., ஐசிஐசிஐ., டிசிஎஸ்., உள்ளிட்ட நிறுவன பங்குகள் உயர்ந்ததாலும் உலகளவில் பங்குச்சந்தைகளில் காணப்பட்ட ஏற்றம் மற்றும் ஆசிய பங்கச்சந்தைகளில் காணப்படும் ஏற்றத்தால் இன்றைய வர்த்தகம் உயர்வுடன் இருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
ரூபாயின் மதிப்பு சரிவு
அந்நிய லெசாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 7 காசுகள் சரிந்து ரூ.73.60ஆக வர்த்தகமானது.
சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 0.02 சதவீதம் குறைந்து 42.45 அமெரிக்க டாலராக விற்பனையானது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|