பதிவு செய்த நாள்
23 அக்2020
22:17
புதுடில்லி:'பர்கர் கிங் இந்தியா' நிறுவனம், பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக அனுமதி கோரி, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, செபிக்கு விண்ணப்பித்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த, துரித உணவு சேவை நிறுவனமான, 'பர்கர் கிங்', இந்தியாவிலும் வணிகத்தில் ஈடுபட்டுள்ளது.542 கோடி ரூபாய்இந்நிலையில், இந் நிறுவனம் பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக, செபியிடம் அனுமதி கோரி விண்ணப்பித்துஉள்ளது.இந்நிறுவனம் பங்கு வெளியீட்டின் மூலம், 542 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது.
'கியு.எஸ்.ஆர்., ஆசியா' நிறுவனத்தின் வசம் உள்ள பங்குகளில், 6 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளும்; மீதி ரூபாய்க்கு புதிய பங்குகளும் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
17 மாநிலம்
இந்தப் பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டப்படும் நிதியைக் கொண்டு, புதிய உணவகங்கள் துவக்கவும், பொதுவான நிர்வாக செலவுகளுக்கு பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.இந்த பங்கு வெளியீட்டுக்கான பணிகளை, கோட்டக் மகிந்திரா கேப்பிட்டல் கம்பெனி, சி.எல்.எஸ்.ஏ., இந்தியா, எடெல்வைஸ் பைனான்ஷியல் சர்வீசஸ், மற்றும் ஜெ.எம்., பைனான்ஷியல் ஆகிய நிறுவனங்கள் மேற்கொள்கின்றன.
செப்டம்பர் மாத நிலவரப்படி, இந்நிறுவனத்துக்கு, 17 மாநிலங்களில் உள்ள, 57 நகரங்களில், மொத்தம், 261 உணவகங்கள் உள்ளன.கடந்த ஆண்டு நவம்பரில், 400 கோடி ரூபாய் நிதி திரட்ட விண்ணப்பித்திருந்த நிலையில், தற்போது, 542 கோடியாக அதிகரித்து அனுமதி கோரியுள்ளது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|