பண்டிகை காலத்தை பொற்காலமாக மாற்றுங்கள் பண்டிகை காலத்தை பொற்காலமாக மாற்றுங்கள் ...  பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கு கிளாண்டு பார்மாவுக்கு அனுமதி பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கு கிளாண்டு பார்மாவுக்கு அனுமதி ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
சமூக நலன் காக்கும் ஈ.எஸ்.ஜி., நிதி முதலீடுகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 அக்
2020
21:28

சர்வதேச அளவில் பிரபலமாக இருக்கும், ஈ.எஸ்.ஜி., நிதிகள், இந்திய மியூச்சுவல் பண்ட் துறையிலும் அறிமுகம் ஆகியிருக்கின்றன. அண்மை காலத்தில், இந்த வகையில் மூன்று நிதிகள் அறிமுகமான நிலையில், மேலும் இரண்டும் புதிய நிதிகள் அறிமுகம் ஆக உள்ளன. முதலீட்டின் மீதான பலனை அளிப்பதோடு, நீடித்த நிலையான வளர்ச்சிக்கு உதவும் சமூக நலன் காக்கும் முதலீடாகவும் கருதப்படுவதால், இவை முதலீட்டாளர்கள் கவனத்தை ஈர்த்து வருகின்றன. சமூக பொறுப்பான முதலீடு வாய்ப்பாக அமையும் ஈ.எஸ்.ஜி., நிதிகள் பற்றி ஒரு அறிமுகம்:


ஈ.எஸ்.ஜி., நிதி என்றால் என்ன?


சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் நிர்வாகம் ஆகியவற்றை குறிக்கும் ஆங்கில சொற்களின் சுருக்கமாக ஈ.எஸ்.ஜி., அமைகிறது. இந்த மூன்று அம்சங்களையும் கவனத்தில் கொண்டு, சிறப்பாக செயல்படும் நிறுவனங்களில் முதலீடு செய்யும் மியூச்சுவல் பண்ட் திட்டங்களாக அவை அமைகின்றன. இவை, நீடித்த வளர்ச்சியை முக்கியமாக கருதுகின்றன.



சமூக முதலீடு:


ஈ.எஸ்.ஜி., நிதிகள், நிறுவனங்களின் நிதி அம்சங்கள் தவிர, சுற்றுச்சூழல் கொள்கை, சமூக செயல்பாடு, ஊழியர்கள் நட்பான தன்மை ஆகிய அம்சங்களை பரிசீலித்து, அவற்றின் பங்குகளில் முதலீடு செய்கின்றன. இந்த வகை முதலீடு, வளர்ந்த நாடுகளில் பிரபலமாக உள்ளன; இந்தியாவில் தற்போது அறிமுகம் ஆகியுள்ளன.


என்ன பயன்?


சுற்றுச்சூழல் பாதிப்பு தொடர்பான முக்கியத்துவம் அதிகரித்து வரும் நிலையில், நீடித்த வளர்ச்சியில் அக்கறை கொண்டுள்ள நிறுவனங்களுக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாக கருதப்படுகிறது. இந்த வகை நிறுவனங்கள், முதலீடு தொடர்பான சாதகமான அம்சங்களையும் உள்ளடக்கியிருப்பதாக கருதப்படுகின்றன.


புதிய அறிமுகம்:


இந்தியாவில் புதிதாக அறிமுகம் ஆகியிருந்தாலும், முதலீடு செய்யும் போது சமூக நலனையும் முக்கியமாக கருதும் இளம் முதலீட்டாளர்கள் இவற்றில் ஆர்வம் காட்டுவர் என கருதப்படுகிறது. குறிப்பாக, கொரோனாவுக்கு பிந்தைய சூழலில், சமூக நோக்கிலான முதலீடு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


வரவேற்பு:


ஈ.எஸ்.ஜி., நிதிகள் தொடர்ந்து அறிமுகம் ஆகி கொண்டிருக்கும் நிலையில், நிறுவனங்களும் சுற்றுச்சூழல் போன்ற அம்சங்களில் அதிக கவனம் செலுத்தும் என கருதப்படுகிறது. வெளிநாட்டு நிதி முதலீட்டாளர்களும் இந்த வகை நிறுவனங்களை ஆதரிக்க வாய்ப்புள்ளதால், ஈ.எஸ்.ஜி., வகை நிதிகள் வரவேற்பை பெறும் என கருதப்படுகிறது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)