பதிவு செய்த நாள்
27 அக்2020
06:13
புதுடில்லி : பயணியர் வாகன வணிகத்தில், அடுத்த, 10 ஆண்டுகளில் ஏற்படும் வளர்ச்சிக்கு தயாராக இருப்பதற்காக, ஒரு கூட்டாளியை, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தேடத் துவங்கி உள்ளது.
இந்த ஆண்டின் துவக்கத்தில், டாடா குழுமத்தின் நிர்வாக குழு, பயணியர் வாகனப் பிரிவை தனி வணிகமாக மாற்றுவதற்கு அனுமதி வழங்கியது. இந்த வணிகம் பயணியர் வாகனங்கள், மின் வாகனங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்கும்.இதையடுத்து, இந்த வணிகத்தில் கூட்டுச் சேர்வதற்கான நிறுவனங்களை தேட துவங்கி உள்ளது, டாடா நிறுவனம்.
இது குறித்து, டாடா மோட்டார்ஸ் பயணியர் வாகன வணிக பிரிவின் தலைவர் ஷைலேஷ் சந்திரா கூறியதாவது:அடுத்த, 10 ஆண்டுகளில், தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றில் பெரும் முதலீடுகள் தேவைப்படும் சூழல் ஏற்படும் என்பதால், அதை சமாளிக்கும் வகையில், தகுதியான நிறுவனங்களுடன் கூட்டு வைக்க விரும்புகிறோம். மேலும் புதிய வாகனங்களை அறிமுகம் செய்யும் கால அளவை குறைக்கும் முயற்சிக்கும் இது பயன்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|