பதிவு செய்த நாள்
27 அக்2020
06:14
புதுடில்லி : கிளாண்டு பார்மா நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கு, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’ அனுமதி வழங்கி உள்ளது.
இந்நிறுவனம், இந்த பங்குகள் வெளியீட்டின் மூலம், 5 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது.பங்கு வெளியீட்டின்போது, 1,250 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளையும், நிறுவனர்கள் வசம் இருக்கும், 3.4 கோடி பங்குகளையும் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.ஐதராபாத்தை சேர்ந்த இந்நிறுவனம், சீனாவின் போசன் பார்மாவின் துணையுடன், ஊசி மருந்துகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
சீனாவில் தாய் நிறுவனத்தை கொண்டு, இந்தியாவில் செயல்படும் பெரிய நிறுவனம் ஒன்று, பங்குச் சந்தையில் பட்டியலிடப்படுவது இதுவே முதன் முறையாகும் என்கின்றனர், விபரம் அறிந்தோர்.இந்நிறுவனம், போசன் சிங்கப்பூர் மற்றும் ஷாங்காய் போசன் பார்மா ஆகிய நிறுவனங்களை தாய் நிறுவனமாக கொண்டிருக்கிறது. பி.வி.என்.ராஜு என்பவரால், 1978ல் இந்நிறுவனம் துவக்கப்பட்டது. 2017ல், இந்நிறுவனத்தின், 74 சதவீத பங்குகளை, போசன் பார்மா கையகப்படுத்தியது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|