தடை வாங்கிய அமேசான் நிறுவனம் தவித்து நிற்கும் பியூச்சர் குழுமம் தடை வாங்கிய அமேசான் நிறுவனம் தவித்து நிற்கும் பியூச்சர் குழுமம் ...  புதிய பங்கு வெளியீட்டில் ஐ.ஆர்.எப்.சி., நிறுவனம் புதிய பங்கு வெளியீட்டில் ஐ.ஆர்.எப்.சி., நிறுவனம் ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
நவராத்திரி பண்டிகை விற்பனை கார்கள் அதிகரிப்பு; டூ – வீலர் சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 அக்
2020
22:20

புதுடில்லி:நவராத்திரி மற்றும் தசரா பண்டிகையை முன்னிட்டு, கார்களின் விற்பனை அதிகரித்துள்ளது. அதே சமயம், இரு சக்கர வாகனங்கள் விற்பனை, எதிர்பார்த்த அளவுக்கு அதிகரிக்கவில்லை.கொரோனா பாதிப்புகளை கவனத்தில் கொண்டு, பலர் சொந்த வாகனங்களில் பயணிப்பதே பாதுகாப்பானது எனக் கருதுகின்றனர்.


இதன் காரணமாக, இந்த பண்டிகை காலத்தை முன்னிட்டு, பலர் கார்கள் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டியுள்ளனர்.கிட்டத்தட்ட, 2 லட்சம் கார்கள் இந்த பண்டிகை காலத்தில் விற்பனை ஆகியுள்ளதாக தெரியவந்துள்ளது. மாருதி சுசூகி நிறுவனம் கடந்த, 5 ஆண்டுகளில் இல்லாத வகையில், கிட்டத்தட்ட, 95 ஆயிரம் கார்களை, இக்காலத்தில் விற்பனை செய்திருப்பதாக தெரிகிறது. இதே போல், ஹூண்டாய், டாடா மோட்டார்ஸ் நிறுவனங்களும் அதிக அளவில் விற்பனை செய்திருக்கின்றன.


ஹூண்டாய் மோட்டார்ஸ், 26 ஆயிரத்து, 68 கார்களை விற்பனை செய்திருக்கிறது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, 28 சதவீதம் அதிகமாகும்.டொயோட்டா கிர்லோஸ்கர், இந்த, 9 நாட்கள் பண்டிகை காலத்தில், விற்பனை, 13 சதவீதம் அதிகரித்திருப்பதாக தெரிவித்துள்ளது.

மகிந்திரா அண்டு மகிந்திரா கார்கள் விற்பனை, 20 சதவீதம் அளவுக்கு அதிகரித்திருக்கிறது. நவராத்திரி விற்பனை, தீபாவளி விற்பனைக்கு முன்னோட்டமாக இருக்கும் என எதிர்பார்க்கிறார்கள், வாகன விற்பனையாளர்கள்.

இந்த பண்டிகை காலத்தில் செடான், ஹேட்ச்பேக், எஸ்.யு.வி., கார்கள் அதிகம் விற்பனை ஆகியிருக்கின்றன. ஆனால், ஆடம்பர கார்கள் விற்பனை, எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. கடந்த ஆண்டு நவராத்திரி பண்டிகை காலத்துடன் ஒப்பிடும்போது, கிட்டத்தட்ட, 40 சதவீதம் அளவுக்கு குறைந்துவிட்டதாக கூறப்படுகிறது.கார்கள் விற்பனை அதிகரித்திருந்த போதிலும், இரு சக்கர வாகன விற்பனை அவ்வளவு அதிகரிக்கவில்லை.


குறிப்பாக, நகரங்களில் விற்பனை எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று தான் கூற வேண்டும். பல நிறுவனங்களின் விற்பனை, கடந்த ஆண்டு அளவில் மட்டுமே இருந்துள்ளது.


பஜாஜ் ஆட்டோ விற்பனையில் எந்த மாற்றமும் காணப்படவில்லை. ஹோண்டாவை பொறுத்தவரை, பைக் விற்பனை சற்று அதிகரித்திருந்த போதும், ஸ்கூட்டர் விற்பனையில் பெரிய மாற்றம் எதுவும் இல்லை. புதிய மாசு உமிழ்வு கட்டுப்பாடுகள் காரணமாக, இரு சக்கர வாகனங்கள் விலை கடுமையாக அதிகரித்துள்ளதும், விற்பனை குறைந்ததற்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது என்று கூறப்படுகிறது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)