பதிவு செய்த நாள்
27 அக்2020
22:23
புதுடில்லி:ஐ.ஆர்.எப்.சி., எனும், இந்திய ரயில்வே பைனான்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கு அனுமதி கோரி, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’க்கு விண்ணப்பித்துள்ளது.
இந்த பங்கு வெளியீட்டின் போது, ஐ.ஆர்.எப்.சி., நிறுவனம், 178 கோடி பங்குகளை விற்பனை செய்ய இருக்கிறது. இதில் புதிய பங்குகளாக, 110 கோடி பங்குகளும்; அரசின் வசம் இருக்கும் பங்குகளில், 59.4 கோடி பங்குகளும் அடக்கம்.இந்த பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டப்படும் நிதியை, வணிக வளர்ச்சியை எதிர்கொள்வதற்கான எதிர்கால மூலதன தேவைகளுக்காகவும்; பொதுவான நிர்வாக செலவுகளுக்காகவும் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக, ஐ.ஆர்.எப்.சி., விண்ணப்பத்தில் தெரிவித்துள்ளது.
இந்த பங்கு வெளியீட்டுக்கான பணிகளை, டி.ஏ.எம்., கேப்பிட்டல் மார்க்கெட் அட்வைசர்ஸ், ஐ.சி.ஐ.சி.ஐ., செக்யூரிட்டீஸ், எஸ்.பி.ஐ., கேப்பிட்டல் மார்க்கெட்ஸ் ஆகிய நிறுவனங்கள் நிர்வகிக்க இருக்கின்றன.கடந்த, 2017ம் ஆண்டு, ஏப்ரலில், மத்திய அமைச்சரவை குழு மொத்தம், 5 ரயில்வே நிறுவனங்களை சந்தையில் பட்டியலிட அனுமதி வழங்கியது.
இவற்றில், ஐ.ஆர்.சி.ஓ.என்., இன்டர்நேஷனல், ஆர்.ஐ.டி.எஸ்., ரெயில் விகாஸ் நிகாம், ஐ.ஆர்.சி.டி.சி., ஆகிய நிறுவனங்கள் சந்தையில் பட்டியலிடப் பட்டுவிட்டன.ஐ.ஆர்.எப்.சி., இந்த ஆண்டு இறுதிக்குள் பட்டியலிடப் பட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|