பதிவு செய்த நாள்
27 அக்2020
22:26
புதுடில்லி.:நடப்பு நிதியாண்டில், நாட்டின் பொருளாதாரம் புத்துயிர் பெறுவதற்கான அறிகுறிகள் நன்றாக இருப்பதாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், நடப்பு நிதியாண்டில், ஜி.டி.பி., எனும், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, மைனசில் அல்லது பூஜ்ஜியத்துக்கு அருகில் இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.
நாட்டின் எரிசக்தி குறித்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய அவர், மேலும் கூறியதாவது: நடப்பு நிதியாண்டில், ஜி.டி.பி., இவ்வளவு குறைவாக இருக்கும் என எதிர்பார்ப்பதற்கான காரணம், ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில், வளர்ச்சி மைனஸ், 23.9 சதவீதம் அளவுக்கு குறைந்தது தான்.
வாழ்வாதாரத்தைவிட, மக்கள் உயிர் முக்கியம் எனக் கருதியதால், அரசாங்கம், மார்ச், 25ம் தேதி முதல், மிக உறுதியான ஊரடங்கு உத்தரவுகளை பிறப்பித்தது. இந்த ஊரடங்கு, தொற்று நோயை சமாளிப்பதற்கான ஆயத்த வேலைகளைச் செய்ய நமக்கு அவகாசம் தந்தது.தற்போது தளர்வுகளை அறிவித்து வருவதால், பொருளாதாரம் புத்துயிர் பெறுவதற்கான அறிகுறிகளைக் காட்டுகின்றன.
பண்டிகை காலம் பொருளாதாரத்தை மேலும் ஊக்குவிக்கும். மூன்றாவது, நான்காவது காலாண்டுகளில் வளர்ச்சிக்கான சாதகமான சூழல் ஏற்படும்.இருப்பினும், முந்தைய காலாண்டு பாதிப்புகளால், ஒட்டுமொத்த நிதியாண்டின் வளர்ச்சி விகிதம், மைனஸ் அல்லது பூஜ்ஜியத்திற்கு அருகில் இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|