பதிவு செய்த நாள்
27 அக்2020
22:27
புதுடில்லி : சரக்குப் போக்குவரத்து கட்டண அதிகரிப்பு, கன்டெய்னர்கள் தட்டுப்பாடு ஆகியவை, மிகப்பெரிய சவாலாக இருப்பதாக, ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இவ்விவகாரத்தில் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து உள்ளனர்.
அண்மையில், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியுஷ் கோயலை
சந்தித்து, தங்கள் கவலைகளை தெரிவித்துள்ளனர்.இது குறித்து, இந்திய ஏற்றுமதி
அமைப்புகளின் கூட்டமைப்பான, ‘எப்.ஐ.இ.ஓ.,’வின் தலைவர் எஸ்.கே. சராப் கூறியதாவது:சரக்கு போக்குவரத்து கட்டணம், சென்றடையும் இடத்தைப் பொறுத்து, 30 – 50 சதவீதம்
அளவுக்கு அதிகரித்துள்ளது.
பஞ்சாப் போன்ற மாநிலங்களில், விவசாயிகள் போராட்டங்களால், சரக்கு போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. கிட்டத்தட்ட, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கன்டெய்னர்கள் மாட்டிக் கொண்டிருப்பதால், ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு சிக்கலாக அமைந்துள்ளது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில்,
நாட்டின் ஏற்றுமதி, 16.66 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டுள்ளது. இதேபோல்,
இறக்குமதியும், 35.43 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|