பதிவு செய்த நாள்
29 அக்2020
22:06
மும்பை ;உலக நாடுகளில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவுகள் உள்ளிட்ட காரணங்களால், நேற்று இந்திய பங்குச் சந்தைகள் சரிவைக் கண்டன.
தேசிய பங்குச் சந்தையின் நிப்டி, 11700 புள்ளிகளுக்கும் கீழே இறங்கியது.நேற்றைய வர்த்தகத்தில், மும்பை பங்குச் சந்தையின், சென்செக்ஸ் குறியீடு, 172.61 புள்ளிகள் குறைந்து, 39749.85 புள்ளிகளுக்கு சரிந்தது.இதேபோல், தேசிய பங்குச் சந்தையின் நிப்டி குறியீடு, 58.80 புள்ளிகள் குறைந்து, 11670.80 புள்ளிகளாக சரிந்தது.
சென்செக்ஸ் குறியீட்டில், எல் அண்டு டி., அதிகபட்சமாக, 5 சதவீதம் விலை சரிவைக் கண்டது. இதையடுத்து, டைட்டன், ஓ.என்.ஜி.சி., ஆக்சிஸ் வங்கி, எச்.யு.எல்., மகிந்திரா அண்டு மகிந்திரா மற்றும் எச்.டி.எப்.சி., ஆகிய நிறுவனங்கள் விலை சரிவைக் கண்டன.மாறாக, ஏஷியன் பெயின்ட்ஸ், அல்ட்ராடெக் சிமென்ட், எச்.சி.எல்., டெக், கோட்டக் வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவன பங்குகள் விலை உயர்ந்தன.
அக்டோபர் மாதத்துக்கான, எப் அண்டு ஓ., ஒப்பந்தங்கள் காலாவதி ஆவதை முன்னிட்டு, சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்தது.மேலும், பல நாடுகளில் கொரோனா தாக்கம் மீண்டும் ஏற்பட்டிருப்பதை அடுத்து, கடுமையான ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது, உலக சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியது. அது, இந்திய சந்தைகளிலும் பிரதிபலித்தது. இவை அனைத்தும், இந்திய சந்தைகளின் சரிவுக்கு காரணமாக அமைந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|