பதிவு செய்த நாள்
30 அக்2020
21:51
புதுடில்லி:அரசின் நிதி பற்றாக்குறை, கடந்த ஆறு மாதங்களில், 9.14 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, முழு ஆண்டு பட்ஜெட் கணிப்பில், 114.8 சதவீதமாகும்.
இந்த பற்றாக்குறை அதிகரிப்புக்கு முக்கிய காரணம், நடப்பு நிதியாண்டின், முதல் ஆறு மாதங்களில், அரசு வருவாய் வசூல் குறைந்து போனது தான்.கொரோனாவை முன்னிட்டு, ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, வருவாய் வசூல் குறைந்து போனது.
இதுவே, கடந்த நிதியாண்டின் முதல் ஆறு மாதங்களில், நிதி பற்றாக்குறை, ஆண்டு பட்ஜெட் கணிப்பில், 92.6 சதவீதமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.வரவுக்கும் செலவுக்கும் இடையேயான வித்தியாசமான நிதிப் பற்றாக்குறை, கடந்த ஜூலை மாதமே, அதன் வரம்பை தாண்டிவிட்டது.
கடந்த பிப்ரவரி மாதத்தில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தன்னுடைய பட்ஜெட் அறிக்கையை சமர்ப்பித்தபோது, 2020 – 21 நிதியாண்டுக்கான நிதிப் பற்றாக்குறையை, 7.96 லட்சம் கோடி ரூபாய் என நிர்ணயித்திருப்பதாக தெரிவித்திருந்தார். இது, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 3.5 சதவீதமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
எது எவ்வாறாயினும், கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக ஏற்பட்ட பொருளாதார சீர்குலைவுகளைக் கருத்தில் கொண்டு, இந்த புள்ளி விபரங்கள், கணிசமாக திருத்தப்பட வேண்டியிருக்கலாம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|