பதிவு செய்த நாள்
30 அக்2020
21:53
புதுடில்லி:கடந்த செப்டம்பருடன் முடிவடைந்த காலாண்டில், ஆப்பிள் நிறுவனம், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் சிறப்பாக செயல்பட்டதை அடுத்து, இதுவரை இல்லாத வகையில், 64.7 பில்லியன் டாலரை, வருவாயாக ஈட்டி உள்ளது.
இது, இந்திய மதிப்பில், 4.79 லட்சம் கோடி ரூபாய்.இதுகுறித்து, ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம்குக் தெரிவிக்கையில், “அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா பசிபிக் நாடுகளில் வருவாய் அதிகரித்துள்ளது. இந்தியாவில், ஆன்லைன் ஸ்டோருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.’’ என்று குறிப்பிட்டு உள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதத்தில், ஆப்பிள் நிறுவனம், அதன் ஆன்லைன் ஸ்டோரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.ஆராய்ச்சி நிறுவனமான, கேனலைஸ் அறிக்கையின்படி, கடந்த செப்டம்பர் காலாண்டில், இந்தியாவில், ஆப்பிள் இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், 8 லட்சம் சாதனங்களை விற்பனை செய்திருப்பதாகவும் தெரிவித்துஉள்ளது.
கவுன்டர்பாயின்ட் நிறுவனம், 30 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமான பிரீமியம் போன் பிரிவில் முன்னணிக்கு ஆப்பிள் வந்திருப்பதாகவும், ஐபோன் எஸ்.இ., 2020 மற்றும் ஐபோன் 11 ஆகியவை அதிகம் விற்பனை ஆகியிருப்பதாகவும் தெரிவித்து உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|