பதிவு செய்த நாள்
31 அக்2020
22:04
புதுடில்லி:செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் நிகர லாபம், 15 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டுள்ளது. அதேசமயம், இன்னொரு வணிகமான, ரிலையன்ஸ் ஜியோ லாபம், மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.
கொரோனா தாக்குதல் காரணமாக, எண்ணெய்க்கான தேவையில் சரிவு ஏற்பட்டதை அடுத்து, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீசின் நிகர லாபம் சரிவைக் கண்டுள்ளது.கடந்த ஆண்டு செப்டம்பர் காலாண்டில், நிகர லாபம், 11 ஆயிரத்து, 262 கோடி ரூபாயாக இருந்த நிலையில், மதிப்பீட்டு காலாண்டில், 9,567 கோடி ரூபாயாக சரிந்துவிட்டது.
ரிலையன்ஸ் ரீடெய்ல் வணிகத்தை பொறுத்தவரை,வரிக்கு முந்தைய லாபம், 13.77 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.கடந்த ஆண்டு இந்த வணிகம், செப்டம்பர் காலாண்டில், வரிக்கு முந்தைய லாபமாக, 2,330 கோடி ரூபாயை ஈட்டியிருந்த நிலையில், தற்போது, 2,009 கோடி ரூபாயை மட்டுமேஈட்டியுள்ளது.வருவாயை பொறுத்தவரை, கடந்த நிதியாண்டு இரண்டாவது காலாண்டில், 41 ஆயிரத்து, 223 கோடி ரூபாயாக இருந்தது, இந்த நிதியாண்டில், 39 ஆயிரத்து, 199 கோடி ரூபாயாக சரிந்துவிட்டது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீசின் இன்னொரு வணிகமான, ரிலையன்ஸ் ஜியோவின் லாபம், இந்த இரண்டாவது காலாண்டில், மூன்று மடங்கு அதிகரித்து, 2,844 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது. வாடிக்கையாளர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்த காரணத்தினால், இதன் வருவாயும் அதிகரித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|