பதிவு செய்த நாள்
31 அக்2020
22:07
மும்பை:நாட்டின் அன்னிய செலாவணி இருப்பு, கடந்த, அக்டோபர், 23ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், 56 ஆயிரத்து, 53 கோடி டாலராக அதிகரித்துள்ளது என, இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இது புதிய சாதனை உயர்வாகும். இது, இந்திய மதிப்பில், 41.48 லட்சம் கோடி ரூபாய். மேலும், இது இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத புதிய உயர்வாகும். மதிப்பீட்டு வாரத்தில், அன்னிய பண மதிப்பு அதிகரித்த காரணத்தால், கையிருப்பு இந்த அளவுக்கு உயர்ந்துள்ளது. இதுவே, கடந்த அக்டோபர், 16ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், அன்னிய செலாவணி இருப்பு, 41.08 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
ரிசர்வ் வங்கி மேலும் தெரிவித்து உள்ளதாவது:கடந்த, 23ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், அன்னிய செலாவணி இருப்பு, 40 ஆயிரத்து, 48 கோடி ரூபாய் அளவுக்கு அதிகரித்து, 41.48 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.மதிப்பீட்டு வாரத்தில், வெளிநாட்டு பண இருப்பு, 520 கோடி டாலர் அளவுக்கு அதிகரித்து, 51 ஆயிரத்து, 752 கோடி டாலராக உயர்ந்துள்ளது.
மேலும், தங்கத்தின் இருப்பு மதிப்பு, 17.5 கோடி டாலர் அதிகரித்து, 3,687 கோடி டாலராக உள்ளது. இந்திய மதிப்பில் இது, 2.73 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.இவ்வாறு ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|