பதிவு செய்த நாள்
31 அக்2020
22:10
புதுடில்லி:ரிசர்வ் வங்கி, நுகர்வோர் நம்பிக்கை மற்றும் குடும்பத்தினரின் பணவீக்க எதிர்பார்ப்பு ஆகியவற்றை அறிந்து கொள்ள, அதன் சமீபத்திய ஆய்வு சுற்றை துவங்கி உள்ளது.
இந்த ஆய்வு முடிவுகள், நிதிக் கொள்கை குறித்த முடிவுகளை எடுப்பதற்கு ரிசர்வ் வங்கிக்கு உதவியாக இருக்கும்.இத்தகைய ஆய்வுகளை, ரிசர்வ் வங்கி தொடர்ச்சியாக எடுத்துவருவது வழக்கமான ஒன்று. ரிசர்வ் வங்கி, அதன் நிதிக் கொள்கை குழு கூட்டத்தை, டிசம்பர் 2 -–4ம் தேதிகளில் நடத்த உள்ளது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தின் முடிவுகள், 4ம் தேதியன்று அறிவிக்கப்படும்.
இந்த ஆய்வில், பொருளாதார நிலைமைகள் குறித்த குடும்பத்தினரின் பொதுவான பார்வைகள், வேலை வாய்ப்பு சூழல்கள், விலை நிலவரம், குடும்பத்தினரின் வரவு மற்றும் செலவுகள் ஆகியவை குறித்த தகவல்கள் இடம்பெறும்.நாட்டின், 13 நகரங்களில் இந்த ஆய்வு வழக்கமாக மேற்கொள்ளப்படும். கிட்டத்தட்ட, 5,400 குடும்பத்தினரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும்.
மேலும், 18 நகரங்களில், தனிநபர் நுகர்வு அடிப்படையில், சுமார் 6,000 வீடுகளில், விலை நிலவரம் மற்றும் பணவீக்கம் குறித்த மதிப்பீடுகளை அறிவதற்கான ஆய்வும் மேற்கொள்ளப்படும்.இந்த ஆய்வு, மும்பையை சேர்ந்த ஏஜன்சி ஒன்றின் மூலமாக நேரிலும், தொலைபேசி வாயிலாகவும் எடுக்கப்படும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|