பதிவு செய்த நாள்
01 நவ2020
21:58
தொழிலாளர் சேமநல நிதியான, பி.எப்., தொடர்பான தகவல்களை உறுப்பினர்கள் தெரிந்து கொள்ள உதவும் வகையில், ‘வாட்ஸ் ஆப்’ மூலமான தகவல் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தொழிலாளர் சேமநல நிதியை நிர்வகிக்கும் நிறுவனம், உறுப்பினர்கள் தகவல்களை பெறவும், குறைகளுக்கு தீர்வு காணவும் பல்வேறு வகையில் சேவை வழங்கி வருகிறது. இணையதளம், சமூக ஊடக பக்கங்கள் மற்றும் கால்சென்டர் வாயிலாக இந்த தகவல்கள் அளிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், உறுப்பினர்கள் தகவல்களை தெரிந்து கொள்ளவும், குறைகளை தெரிவிக்கவும் தற்போது வாட்ஸ் ஆப் உதவி சேவை, தொழிலாளர் சேமநல நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வாட்ஸ் ஆப்பில் இந்த எண்ணை தொடர்பு கொண்டு தகவல்கள் பெறலாம். இந்த எண் மூலம் குறைகளையும் தெரிவிக்கலாம்.
ஒவ்வொரு பிராந்திய கிளை அலுவலகத்திற்கும் உள்ள வாட்ஸ் ஆப் எண்ணை தொடர்பு கொள்வதன் மூலம், இந்த சேவையை பயன்படுத்தலாம். பி.எப்., உறுப்பினர்கள் தங்கள் கணக்கு வைத்துள்ள கிளைக்கான எண்ணை அறிவதன் மூலம், இந்த வசதியை அணுகலாம். பி.எப்., இணையதளத்தில், உறுப்பினர்கள் தங்கள் பகுதிக்கான தொடர்பு எண்ணை அறிந்து கொள்ளலாம்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|