பதிவு செய்த நாள்
03 நவ2020
22:09
புதுடில்லி:ஆதார் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கான முயற்சிகளில், அதன் பங்குகளை வைத்திருக்கும் ஹோல்டிங் நிறுவனமான, 'பிளாக்ஸ்டோன்' இறங்கியுள்ளது.
இது குறித்து, துறை சார்ந்த விபரமறிந்த நபர் தெரிவித்துள்ளதாவது:ஆதார் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம், பங்கு வெளியீட்டுக்கு வருவது குறித்த ஆலோசனைகளில், பிளாக்ஸ்டோன் இறங்கி உள்ளது.இம்முயற்சி வெற்றியடைந்தால், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலான காலத்தில், முதல் முறையாக, பங்கு வெளியீட்டுக்கு வரும் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் இதுவாகத் தான் இருக்கும்.
இதற்கு முன் கடைசியாக, கடந்த, 2018 அக்டோபரில், ஜெய்ப்பூரைச் சேர்ந்த, ஆவாஸ் பைனான்ஷியர்ஸ், 1,640 கோடி ரூபாய் திரட்டுவதற்காக பங்கு வெளியீட்டுக்கு வந்தது. அதுமட்டுமின்றி; கடந்த ஐந்து ஆண்டுகளில், அமெரிக்காவை சேர்ந்த தனியார் பங்கு முதலீட்டு நிறுவனம் ஒன்றின் பின்னணியில் செயல்படும் ஒரு நிறுவனம், இந்தியாவில் பங்கு வெளியீட்டுக்கு வருகிறது என்றால், அதுவும் இதுவாகத் தான் இருக்கும்.
இதற்கு முன், கடந்த, 2015ல், எஸ்.எச்.கேல்கார் நிறுவனம், 500 கோடி ரூபாய் திரட்டும் வகையில், பங்கு வெளியீட்டுக்கு வந்தது. இந்நிறுவனமும், பிளாக்ஸ்டோன் பின்னணியில் செயல்படும் நிறுவனமே.ஆதார் ஹவுசிங் பைனான்ஸ், பங்கு வெளியீட்டின் மூலம், 2,200 - 2,900 கோடி ரூபாய் வரை நிதி திரட்ட முயற்சிக்கும் என தெரிகிறது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|