பதிவு செய்த நாள்
03 நவ2020
22:15
மும்பை:இறக்குமதி வரிகளை உயர்த்துவதன் மூலம், உற்பத்தியை ஊக்குவிக்கவோ; அல்லது, ஏற்றுமதியை மேம்படுத்தவோ முடியாது என, எஸ்.பி.ஐ., ஆய்வறிக்கை தெரிவித்து உள்ளது.
உள்ளூர் உற்பத்தியை உயர்த்த உதவும் வகையில், அரசாங்கம் இறக்குமதி வரிகளை உயர்த்தி வரும் நிலையில், எஸ்.பி.ஐ., ஆய்வறிக்கை, இதுபோன்று வரிகளை அதிகரிப்பது, உற்பத்தியில் போட்டியை ஊக்குவிப்பதற்கு பதிலாக, திறமை இன்மைக்கு தான் வழிவகுக்கும் என்று கூறியுள்ளது. மேலும், இறக்குமதி வரிகளை குறைக்கவும் அது கோரியுள்ளது.
அறிக்கையில் மேலும் கூறப்பட்டுஉள்ளதாவது:நாட்டின் சுயசார்பை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக, ஏற்றுமதி வரியை அதிகரிப்பது சரியாக இருக்காது.அதிக வரிகள், உற்பத்தித் திறனை மேம்படுத்த உதவாது. ஆனால், உள்ளூர் நிறுவனங்கள் எளிதான பாதையில் செல்லவும், தரத்தை புறக்கணிப்பதற்கும் அது உதவுவதாக இருக்கும்.
மாறாக, உற்பத்தியை மிகவும் திறனுடையதாக மாற்றுவதற்கான உள்கட்டமைப்பை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.இதன் மூலமாக, ஏற்றுமதியில் உள்ள போட்டிகளை நம்மால் எளிதாக எதிர்கொள்ள முடியும்.மேலும், வணிகங்கள் செயல்படுவதற்கான வழிமுறைகளையும் எளிதாக்க வேண்டும். இறக்குமதி வரியை, ஒரு சதவீதம் அதிகரிப்பது என்பது, 200 கோடி டாலர் இறக்குமதியை குறைப்பதற்கு வழிவகுக்கும்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|