பதிவு செய்த நாள்
04 நவ2020
21:58
ஐதராபாத்:கிளாண்டு பார்மா நிறுவனம், வரும், 9ம் தேதிஅன்று, ஐ.பி.ஓ., எனும், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருகிறது. இந்நிலையில், அதன் பங்கின் விலை, 1,490- – 1,500 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளாண்டு பார்மா நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டின் மூலம், 6,500 கோடி ரூபாய் நிதியை திரட்ட திட்டமிட்டுள்ளது. மேலும், இந்த பங்கு வெளியீட்டின் போது, 1,250 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகள் வெளியிடப்படுகின்றன. இவை தவிர, சீனாவை சேர்ந்த, போசன் பார்மா, கிளாண்டு செல்சஸ் கெமிக்கல்ஸ் ஆகிய நிறுவனங்கள் வசம் இருக்கும் பங்குகளும் விற்பனைக்கு விடுக்கப்பட உள்ளன.
ஐதராபாதைச் சேர்ந்த இந்நிறுவனம், சீனாவின் போசன் பார்மாவின் துணையுடன், ஊசி மருந்துகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.சீனாவில் தாய் நிறுவனத்தை கொண்டு, இந்தியாவில் செயல்படும் பெரிய நிறுவனம் ஒன்று, பங்குச் சந்தையில் பட்டியலிடப்படுவது இதுவே முதன் முறையாகும் என்கின்றனர், விபரம் அறிந்தோர்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|