பதிவு செய்த நாள்
04 நவ2020
21:59
மும்பை:தொடர்ந்து மூன்றாவது வர்த்தக நாளாக, இந்திய பங்குச் சந்தைகள், நேற்றும் உயர்வை சந்தித்தன. அமெரிக்க அதிபர் தேர்தலை முன்னிட்டு, உலக சந்தைகளில் சாதகமான போக்கு நிலவியதால், அது இந்திய சந்தைகளிலும் பிரதிபலித்தது.
மேலும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இன்போசிஸ், கோட்டக் வங்கி ஆகிய நிறுவன பங்குகள் விலையும் அதிகரித்தது சந்தையின் உயர்வுக்கு வழிவகுத்தது.வர்த்தகத்தின் போது, அதிக ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட சந்தைகள், வர்த்தக இறுதியில் உயர்வை சந்தித்தன.மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ், 355.01 புள்ளிகள் அதிகரித்து, வர்த்தகத்தின் இறுதியில், 40616.14 புள்ளிகளில் நிலை பெற்றது.
இதைப் போலவே, தேசிய பங்குச் சந்தையின் நிப்டியும், 95 புள்ளிகள் அதிகரித்து, 11908.50 புள்ளிகளில் நிலைபெற்றது.நேற்றைய வர்த்தகத்தில், இண்டஸ்இண்ட் பேங்க் பங்குகள் விலை, 5 சதவீதம் அளவுக்கு அதிகரித்தது.இதனையடுத்து, சன் பார்மா, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், இன்போசிஸ், கோட்டக் வங்கி, டெக் மகிந்திரா ஆகிய நிறுவன பங்குகளும் விலை உயர்வைக் கண்டன.
மாறாக, எச்.டி.எப்.சி., பவர்கிரிட், ஆக்சிஸ் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, என்.டி.பி.சி., ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை சரிவை சந்தித்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|