பதிவு செய்த நாள்
04 நவ2020
22:00
புதுடில்லி:சிறு வணிகங்கள் வேகமாக இயல்பு நிலைக்கு திரும்பி வருவதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக இருக்கும் நுண், குறு, சிறு வணிகங்களின் செயல்பாடுகள், கொரோனாவுக்கு முன்பு இருந்த நிலைக்கு வேகமாக திரும்பி வருகின்றன. மேலும், அவை தங்களது செயல்திறன் மற்றும் வளர்ச்சியை அதிகரிக்க, டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு மாறி வருவதாகவும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டார்ட் அப் நிறுவனமான,‘ஓகேகிரெடிட்’ நிறுவனம் வெளியிட்டிருக்கும் ஆய்வறிக்கையில், மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:ஆய்வு மேற்கொள்ளப்பட்ட, 36 மாநிலங்களில், 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வணிக செயல்பாடுகள், கொரோனா காலத்துக்கு முன்பிருந்த நிலையை விட, அதிகரித்து காணப்படுகின்றன.
தமிழ்நாடு, கர்நாடகா, மஹாராஷ்டிரா, குஜராத், ஆந்திர பிரதேசம், டெல்லி ஆகியவற்றில் வணிக செயல்பாடுகள், கொரோனாவுக்கு முன் இருந்த நிலையில், 90 – 95 சதவீதம் அளவுக்கு திரும்பி விட்டன.பீஹார், ஹரியானா, அசாம், ராஜஸ்தான், ஹிமாச்சல் ஆகிய மாநிலங்களில், கொரோனா காலத்துக்கு முன் இருந்ததை விட, 10 சதவீதம் அளவுக்கு, வணிக செயல்பாடுகள் அதிகரித்துள்ளன.
இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களில், பெருநகரங்களை விட வேகமான மீட்சி காணப்படுகிறது.கடந்த செப்டம்பர் மாதத்தில், மருந்தகங்கள், மளிகை கடைகளில் இரட்டை இலக்க வளர்ச்சி எட்டப்பட்டுஇருக்கிறது.இவ்வாறு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|