பதிவு செய்த நாள்
06 நவ2020
22:00
புதுடில்லி:வீடுகள் விற்பனை, நடப்பு நிதியாண்டில், 35 – 40 சதவீதம் அளவுக்கு சரிவைக் காணும் என, தர நிர்ணய நிறுவனமான, ‘இக்ரா’வின் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
கடந்த செப்டம்பர் காலாண்டில் தேவைகள் அதிகரித்திருந்த போதிலும், நடப்பு நிதியாண்டில், வீடுகள் விற்பனை, 35 – 40 சதவீதம் சரிவைக் காணும் என, இக்ரா தெரிவித்துள்ளது. இதற்கு முன் இந்நிறுவனம், வீடுகள் விற்பனை, 45 சதவீதம் அளவுக்கு சரிவைக் காணும் என கணித்திருந்த நிலையில், தற்போது, அதை மாற்றிக் கொண்டிருக்கிறது.
முக்கியமான எட்டு நகரங்களான சென்னை, கோல்கட்டா, பெங்களூரு, ஐதராபாத், மும்பை, டெல்லி, புனே, அகமதாபாத் ஆகியவற்றில், செப்டம்பர் காலாண்டில் மீட்சி காணப்பட்டு உள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது.அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நடப்பு நிதியாண்டின் இரண்டாவது அரையாண்டில், விற்பனை மேலும் அதிகரிக்கும் என்றாலும், மொத்தத்தில் 35 – 40 சதவீதம் சரிவு இருக்கும்.செப்டம்பர் காலாண்டில், சகாய விலை வீடுகள் மற்றும் மத்திய தர, உயர் மத்திய தர வீடுகள் அதிகம் விற்பனை ஆகி உள்ளன.படிப்படியான தளர்வுகள், வீட்டுக் கடன் வட்டி குறைந்து வருவது, கவர்ச்சிகரமான தள்ளுபடி மற்றும் கட்டண திட்டங்கள் ஆகியவை காரணமாக இந்த உயர்வு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|