பதிவு செய்த நாள்
10 நவ2020
22:29
மும்பை:மும்பை பங்குச் சந்தை குறியீடான, சென்செக்ஸ், முதன்முறையாக, 43 ஆயிரம் புள்ளிகளை தாண்டி சாதனை படைத்துள்ளது. நிப்டியும், 12 ஆயிரத்து, 600 புள்ளிகளைத் தாண்டி உள்ளது.
நேற்றைய பங்குச் சந்தை வர்த்தகத்தில், இந்திய பங்குச் சந்தை குறியீடுகள், வரலாற்று உயர்வை எட்டியுள்ளன.மும்பை பங்குச் சந்தையின் குறியீடான, சென்செக்ஸ், நேற்று, வர்த்தகத்தினிடையே, 43316.44 புள்ளிகளைத் தொட்டது. பின் வர்த்தகத்தின் இறுதியில் 680.22 புள்ளிகள் அதிகரித்து, 43277.65 புள்ளிகளில் நிலைபெற்றது.
இதைப் போலவே, தேசிய பங்குச் சந்தையின் நிப்டியும் வரலாற்று உச்சம் தொட்டது. வர்த்தகத்தின் இறுதியில், 170.05 புள்ளிகள் அதிகரித்து, 12631.10 புள்ளிகளில் நிலைபெற்றது.
நேற்றைய வர்த்தகத்தில், சென்செக்ஸ் பிரிவில், பஜாஜ் பைனான்ஸ் நிறுவன பங்குகள், 9 சதவீதம் அளவுக்கு விலை உயர்வைக் கண்டது.
இதையடுத்து, இண்டஸ்இண்ட் வங்கி, எல் அண்டு டி., பஜாஜ் பின்சர்வ், எச்.டி.எப்.சி., எஸ்.பி.ஐ., ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, ஓ.என்.ஜி.சி., ஆக்சிஸ் வங்கி ஆகியவை விலை அதிகரித்தன.
மாறாக, டெக் மகிந்திரா, எச்.சி.எல்.,டெக், இன்போசிஸ், நெஸ்ட்லே இந்தியா, சன்பார்மா, டி.சி.எஸ்., ஆகிய நிறுவன பங்குகள் விலை சரிந்தன. கொரோனா தடுப்பூசியின் வெற்றிகரமான, 3ம் கட்ட சோதனை குறித்து, பயோஎன்டெக், பைசர் ஆகிய நிறுவனங்களின் அறிவிப்புகள் முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியது.
மேலும் தொடர்ச்சியான பொருளாதார மீட்சிக்கான சாத்தியக்கூறுகள் ஆகியவை பங்குகள் விலை உயர்வுக்கு வழிவகுத்தன.மேலும், உலக சந்தைகளின் உயர்வான போக்கும், இந்திய சந்தைகள் உயர்வுக்கு உதவின.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|