நவம்பர் முதல் வாரத்தில் ஏற்றுமதி 22.47 சதவீதம் உயர்வு நவம்பர் முதல் வாரத்தில் ஏற்றுமதி 22.47 சதவீதம் உயர்வு ...  மியூச்சுவல் பண்டு கடன் பத்திர திட்டத்தில்ரூ.1.10 லட்சம் கோடி மியூச்சுவல் பண்டு கடன் பத்திர திட்டத்தில்ரூ.1.10 லட்சம் கோடி ...
வாசனை பொருட்கள் ஏற்றுமதி ரூ.10,000 கோடியை தாண்டியது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 நவ
2020
21:46

கம்பம்:ஐந்து மாதங்களில், 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான வாசனை பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக, நறுமணப் பொருட்கள் வாரியம் தெரிவித்துள்ளது.

சீரகம், மஞ்சள், தனியா, ஜாதிக்காய், வெந்தயம், கிராம்பு, ஏலக்காய் உள்ளிட்ட வாசனைப் பொருட்கள் வளைகுடா, ஜப்பான், ஜெர்மனி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.கடந்த ஏப்., – ஆக., வரையில் 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான, 5 லட்சத்து, 70 ஆயிரம் டன் வாசனைப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு, இதே காலத்தில், 8,800 கோடி ரூபாய் மதிப்புள்ள 4 லட்சத்து, 86 ஆயிரம் டன் வாசனைப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.இதில் மிளகாய் தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது. மதிப்பீட்டு காலத்தில், 2,876 கோடி ரூபாய் மதிப்புள்ள 2 லட்சத்து, 10 ஆயிரம் டன் மிளகாய் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. 1,873 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு லட்சத்து 33 ஆயிரம் டன் சீரகம் ஏற்றுமதியாகியுள்ளது.


221 கோடி ரூபாய மதிப்புள்ள 1,300 டன் ஏலக்காய் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, இதே காலத்தில், 55 கோடி ரூபாய் மதிப்புள்ள 400 டன் ஏலக்காய் ஏற்றுமதியாகி இருந்தது. கொரோனா நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் மஞ்சளுக்கு வெளிநாடுகளிலும் கிராக்கி அதிகரித்துள்ளது.அதனால், மதிப்பீட்டு காலத்தில் 704 கோடி ரூபாய் மதிப்புள்ள 79 ஆயிரம் டன் மஞ்சள் ஏற்றுமதியாகியுள்ளது.

கடந்த ஆண்டை ஒப்பிடும் போது, மதிப்பீட்டு காலத்தில், வாசனைப் பொருட்கள் ஏற்றுமதி,
15 சதவீதம் அதிகரித்துள்ளதாக, நறுமணப் பொருட்கள் வாரியம் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)