பதிவு செய்த நாள்
11 நவ2020
21:46
கம்பம்:ஐந்து மாதங்களில், 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான வாசனை பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக, நறுமணப் பொருட்கள் வாரியம் தெரிவித்துள்ளது.
சீரகம், மஞ்சள், தனியா, ஜாதிக்காய், வெந்தயம், கிராம்பு, ஏலக்காய் உள்ளிட்ட வாசனைப் பொருட்கள் வளைகுடா, ஜப்பான், ஜெர்மனி, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.கடந்த ஏப்., – ஆக., வரையில் 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான, 5 லட்சத்து, 70 ஆயிரம் டன் வாசனைப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு, இதே காலத்தில், 8,800 கோடி ரூபாய் மதிப்புள்ள 4 லட்சத்து, 86 ஆயிரம் டன் வாசனைப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.இதில் மிளகாய் தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது. மதிப்பீட்டு காலத்தில், 2,876 கோடி ரூபாய் மதிப்புள்ள 2 லட்சத்து, 10 ஆயிரம் டன் மிளகாய் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. 1,873 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு லட்சத்து 33 ஆயிரம் டன் சீரகம் ஏற்றுமதியாகியுள்ளது.
221 கோடி ரூபாய மதிப்புள்ள 1,300 டன் ஏலக்காய் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு, இதே காலத்தில், 55 கோடி ரூபாய் மதிப்புள்ள 400 டன் ஏலக்காய் ஏற்றுமதியாகி இருந்தது. கொரோனா நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் மஞ்சளுக்கு வெளிநாடுகளிலும் கிராக்கி அதிகரித்துள்ளது.அதனால், மதிப்பீட்டு காலத்தில் 704 கோடி ரூபாய் மதிப்புள்ள 79 ஆயிரம் டன் மஞ்சள் ஏற்றுமதியாகியுள்ளது.
கடந்த ஆண்டை ஒப்பிடும் போது, மதிப்பீட்டு காலத்தில், வாசனைப் பொருட்கள் ஏற்றுமதி,
15 சதவீதம் அதிகரித்துள்ளதாக, நறுமணப் பொருட்கள் வாரியம் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|