பதிவு செய்த நாள்
11 நவ2020
21:55
புதுடில்லி:மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின் கடன் பத்திர திட்டங்களில், கடந்த அக்டோபரில், 1.10 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
‘ஆம்பி’ எனப்படும், இந்திய மியூச்சுவல் பண்டு கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை: மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின் கடன் பத்திர திட்டங்களில், தொடர்ந்து இரு மாதங்களாக அதிக அளவிலான முதலீடு வெளியேறி வந்தது. இத்திட்டங்களில், கடந்த ஆகஸ்ட் மாதம், முதலீட்டாளர்கள், 51 ஆயிரத்து, 962 கோடி ரூபாய் திரும்பப் பெற்றுள்ளனர்.
எனினும், செப்டம்பர் மாதம், 3,907 கோடி ரூபாய் என்ற அளவிலேயே முதலீடு வெளியேறியது. இந்நிலையில், கடந்த, அக்டோபரில், ‘லிக்யுட் பண்டு’, நிதிச் சந்தை மற்றும் குறுகிய கால முதலீட்டுப் பிரிவுகளில் அதிக அளவில் முதலீடு குவிந்தது.இதன் காரணமாக, மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின் கடன் பத்திர திட்டங்களில், அக்டோபரில், 1.10 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
இதில், ‘லிக்யுட் பண்டு’ திட்டத்தில், 19 ஆயிரத்து, 583 கோடி ரூபாய், நிதிச் சந்தை திட்டத்தில், 15 ஆயிரத்து, 445 கோடி ரூபாய் முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.குறுகிய கால முதலீட்டு திட்டங்களில், 15 ஆயிரத்து, 156 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி, பொதுத் துறை நிறுவனங்கள், வங்கிகள், கார்ப்பரேட் நிறுவனங்கள் போன்றவற்றின் கடன் பத்திர மியூச்சுவல் பண்டு திட்டங்களை, முதலீட்டாளர்கள் தேர்வு செய்கின்றனர்.
இடர்ப்பாட்டிற்கு அதிக வாய்ப்புள்ள மியூச்சுவல் பண்டு திட்டங்களில் இருந்து, முதலீட்டாளர்கள் தள்ளி நிற்கின்றனர் அல்லது முதலீட்டை திரும்பப் பெறுகின்றனர்.இதன் காரணமாக, கடந்த அக்.,ல் இடர்ப்பாடு அதிகம் உள்ள மியூச்சுவல் பண்டு திட்டத்தில் இருந்து, 415 கோடி ரூபாய் வெளியேறியுள்ளது.
இது, செப்.,ல், 539 கோடி, ஆகஸ்டில், 554 கோடி, ஜூலையில், 670 கோடி ரூபாயாக இருந்தது. ஏப்ரல், மே, ஜூனில் முறையே, 19 ஆயிரத்து, 23 கோடி, 5,173 கோடி மற்றும் 1,494 கோடி ரூபாய், இடர்ப்பாடு அதிகம்உள்ள மியூச்சுவல் பண்டு திட்டங்களில் இருந்து வெளியேறியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|