வாசனை பொருட்கள் ஏற்றுமதி   ரூ.10,000 கோடியை தாண்டியது  வாசனை பொருட்கள் ஏற்றுமதி ரூ.10,000 கோடியை தாண்டியது ...  வருமான வரித் துறை 1.32 லட்சம் கோடி ரூபாய்  ரீபண்டு வருமான வரித் துறை 1.32 லட்சம் கோடி ரூபாய் ரீபண்டு ...
மியூச்சுவல் பண்டு கடன் பத்திர திட்டத்தில்ரூ.1.10 லட்சம் கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 நவ
2020
21:55

புதுடில்லி:மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின் கடன் பத்திர திட்டங்களில், கடந்த அக்டோபரில், 1.10 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

‘ஆம்பி’ எனப்படும், இந்திய மியூச்சுவல் பண்டு கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை: மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின் கடன் பத்திர திட்டங்களில், தொடர்ந்து இரு மாதங்களாக அதிக அளவிலான முதலீடு வெளியேறி வந்தது. இத்திட்டங்களில், கடந்த ஆகஸ்ட் மாதம், முதலீட்டாளர்கள், 51 ஆயிரத்து, 962 கோடி ரூபாய் திரும்பப் பெற்றுள்ளனர்.


எனினும், செப்டம்பர் மாதம், 3,907 கோடி ரூபாய் என்ற அளவிலேயே முதலீடு வெளியேறியது. இந்நிலையில், கடந்த, அக்டோபரில், ‘லிக்யுட் பண்டு’, நிதிச் சந்தை மற்றும் குறுகிய கால முதலீட்டுப் பிரிவுகளில் அதிக அளவில் முதலீடு குவிந்தது.இதன் காரணமாக, மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின் கடன் பத்திர திட்டங்களில், அக்டோபரில், 1.10 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.


இதில், ‘லிக்யுட் பண்டு’ திட்டத்தில், 19 ஆயிரத்து, 583 கோடி ரூபாய், நிதிச் சந்தை திட்டத்தில், 15 ஆயிரத்து, 445 கோடி ரூபாய் முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.குறுகிய கால முதலீட்டு திட்டங்களில், 15 ஆயிரத்து, 156 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி, பொதுத் துறை நிறுவனங்கள், வங்கிகள், கார்ப்பரேட் நிறுவனங்கள் போன்றவற்றின் கடன் பத்திர மியூச்சுவல் பண்டு திட்டங்களை, முதலீட்டாளர்கள் தேர்வு செய்கின்றனர்.


இடர்ப்பாட்டிற்கு அதிக வாய்ப்புள்ள மியூச்சுவல் பண்டு திட்டங்களில் இருந்து, முதலீட்டாளர்கள் தள்ளி நிற்கின்றனர் அல்லது முதலீட்டை திரும்பப் பெறுகின்றனர்.இதன் காரணமாக, கடந்த அக்.,ல் இடர்ப்பாடு அதிகம் உள்ள மியூச்சுவல் பண்டு திட்டத்தில் இருந்து, 415 கோடி ரூபாய் வெளியேறியுள்ளது.


இது, செப்.,ல், 539 கோடி, ஆகஸ்டில், 554 கோடி, ஜூலையில், 670 கோடி ரூபாயாக இருந்தது. ஏப்ரல், மே, ஜூனில் முறையே, 19 ஆயிரத்து, 23 கோடி, 5,173 கோடி மற்றும் 1,494 கோடி ரூபாய், இடர்ப்பாடு அதிகம்உள்ள மியூச்சுவல் பண்டு திட்டங்களில் இருந்து வெளியேறியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)