பதிவு செய்த நாள்
11 நவ2020
21:57
புதுடில்லி:நடப்பு நிதியாண்டில், நவ., 10 நிலவரப்படி கூடுதலாக வரி செலுத்தியோருக்கு, 1.32 லட்சம் கோடி ரூபாய் திரும்ப தரப்பட்டுள்ளது.
வருமான வரித் துறை வெளியிட்டுள்ள ‘டுவிட்டர்’ செய்தி:மத்திய நேரடி வரிகள் வாரியம், கூடுதலாக வரி செலுத்திய, 39.75 லட்சம் பேருக்கு, நடப்பு,2020–21ம் நிதியாண்டில், ஏப்., 1 முதல் நவ., 10 வரை, 1 லட்சத்து, 32 ஆயிரத்து, 800 கோடி ரூபாய் திரும்ப வழங்கியுள்ளது. இதில், தனி நபர் வருமான வரி பிரிவில், 37 லட்சத்து, 81 ஆயிரத்து, 599 பேருக்கு, 35 ஆயிரத்து, 123 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
அதுபோல, 1 லட்சத்து, 93 ஆயிரத்து, 813 கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு, கூடுதலாக செலுத்திய, 97 ஆயிரத்து, 677 கோடி ரூபாய் திரும்ப அளிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. வரி மதிப்பீட்டு ஆண்டின் கணக்குப்படி ஒருவர் செலுத்தும் வருமான வரியில், பல்வேறு வரி விலக்கு கழிவுகள் போக, கூடுதலாக செலுத்தப்பட்ட வரி,திரும்ப வழங்கப் படுகிறது. இது, வருமான வரி செலுத்துவோரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|